பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுவதென மேட்டுப்பாளையம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 29, 2023

பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுவதென மேட்டுப்பாளையம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

மேட்டுப்பாளையம், ஜூன் 29- மேட்டுப் பாளையம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 25.6.2023 மாலை 6:00 மணிக்கு மேட்டுப் பாளையம் வசந்தம் ஸ்டில்ஸ் மேல் மாடியில் தலைமை கழக அமைப்பாளர் த.சண்முகம் தலைமையில்  நடைபெற்றது.

கூட்டத்தில் ஈரோடு பொதுக் குழு தீர்மானங்களை நிறை வேற்ற செயல்படுவதுடன் கழக உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒருங்கிணைந்த திராவிடர் கழக கோவைமாவட்டத்தின் மேனாள் தலைவரும்,  கோவை மாவட்ட கழக மண்டல தலைவர், மாவட்ட காப்பாளர், கோவை வர்த்தக சபையின் செயலாளர், சிறுநூற்பாலைகள் சங்க செயலாளர்போன்ற பல் வேறு பொறுப்புகள் வகித்த பெரியார் பெருந்தொண்டர் வசந்தம் கு.இராமச்சந்திரன் அவர் களின் மறைவிற்கும், கோவை மண்டல கழக செயலாளர் ச. சிற்றரசு, பகுத்தறிவாளர்கழ.க தோழர் சித்திரவேல், மறைந்த கு.வெ.கி.ஆசான் அவர்களு டைய துணைவியார் மறைந்த சாரதா மணி அம்மையார் அவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப் பட்டது.

மேட்டுப்பாளையம் மாவட்ட கழகத்தின் சார்பாக காரமடை ஒன்றியம் குட்டை புதூரில் பயிற்சி முகாம் நடத்து வது என்றும், மாதம் ஒரு நாள் கழகத் தோழர்கள் சந்திப்பு கூட் டம் அந்தந்த பகுதிகளில் நடத்து வது என்றும், ஈரோடு பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற பாடுபடுவது என்றும், திராவிடர் கழக உறுப்பினர் சேர்க்கையை விரைவுப்படுத்துவது என்றும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் தரும. வீரமணி,  மேட்டுப்பாளை யம் மாவட்டத் தலைவர் சு.வேலு சாமி, மாவட்ட செயலாளர் க.சு.அரங்கசாமி, மாவட்ட மேனாள் தலைவர் பா.பால சுப்ரமணியன், மாவட்ட இளை ஞரணி தலைவர் பிரதிப், மண் டல இளைஞரணி தலைவர் மு.வீரமணி, மேட்டுப்பாளையம் நகரசெயலாளர் வெ.சந்திரன், மாவட்ட அமைப்பாளர் செல்வ ராசு, தமிழ்மணி, உத்திரி நாதன், நாராயணன், லியாகத் அலி, மணி, காரமடை ஒன்றிய தலை வர் ஏ.எம்.ராஜா, மாவட்ட மகளிர் அணி தலைவர் நாகமணி, ரங்கசாமி, முத்துசாமி, நந்த குமார், குருசாமி ஆகியோர் கலந்துகொண்டனர் நகர செயலாளர் வெ.சந்திரன் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.

No comments:

Post a Comment