தெலங்கானாவில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் சோதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 15, 2023

தெலங்கானாவில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் சோதனை

 அய்தராபாத், ஜூன் 15 - முதலமைச்சர் சந்திரசேகரராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி ஆட்சி நடக்கிற தெலுங்கானா மாநிலத்தில், ஆளும் கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது வரி ஏய்ப்பு, சட்ட விரோத ரொக்க பரிமாற்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து குற்றச்சாட்டுக்கு ஆளான நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகர் (ரெட்டி), சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனார்த்தனன், சேகர் ஆகியோரின் வீடுகளில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனைகள் நடத்தினர். இந்த சோதனைகள் பெங்களூரு, அய்தராபாத் மற்றும் தெலங்கானா மாநிலத்தின் பல இடங்களில் ஒரே நேரத்தில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment