கடந்த 9 ஆண்டு பிஜேபி ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 11, 2023

கடந்த 9 ஆண்டு பிஜேபி ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய கேள்வி

சேலம், ஜூன் 11 - சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் சேலம் 5 ரோட்டில் உள்ள ரத்தின வேல் ஜெயக்குமார் திருமண மண்டபத் தில் நேற்று (10.6.2023) நடந்தது. அமைச் சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் இணைந்து திராவிடர் கழகம் என்று உருவானது இந்த சேலம் மண்ணில் தான். இதே சேலத்தில் தான் திராவிடர் கழகத்தில் இருந்து தி.மு.க. என்ற இயக்கத்தை அறிஞர் அண்ணா தீர்மானமாக கொண்டு வந்தார். இங்கு தான் தலைவர் கலைஞர் தங்கியிருந்து திரைப் படங்களுக்கு வசனங்களை எழுதினார். 

இதுதவிர 1996ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்தபிறகு 1997ஆம் ஆண்டில் சேலத்தில் 3 நாட் கள் மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டின் பேரணிக்கு தலைமை ஏற்று நடத்த எனக்கு பெருமையை தேடி தந்தவர் அண்ணன் வீரபாண்டி ஆறுமுகம். 

அடுத்த ஆண்டு தான் நாடாளுமன்ற தேர்தல் என்று சாதாரணமாக இருந்து விடக்கூடாது. தற்போது நாட்டில் பா.ஜனதாவின் செல்வாக்கு சரிந்து வருகிறது. அந்த ஆத்திரத்தில் அவர்கள் எந்த முடிவையும் எடுப்பார்கள். கர்நாடக மாநில தேர்தலில் ஏற்பட்ட தோல்வி பா.ஜனதாவுக்கு தொடரும் என்றால் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வரலாம். இதற்கு நாம் இப்போதே தயாராக வேண்டும். சென்னைக்கு ஒன்றிய உள்துறை மந்திரி அமித்ஷா வந்துள்ளார். இதன்மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கு அவர்கள் தயாராகி வருவது தெரிகிறது. 

தொடர்ந்து வேலூர் பொதுக் கூட்டத்திலும் அவர் பேச உள்ளதாகவும் தெரிகிறது. நான் கேட்கிறேன். தமிழ் நாட்டுக்கு கடந்த 9 ஆண்டுகளில் ஒன்றிய அரசு செய்தது என்ன? என்று அமித்ஷாவால் திட்டங்களை பட்டிய லிட்டு கூறமுடியுமா?. ஒன்றியத்தில் காங்கிரஸ்-_தி.மு.க. கூட்டணியில் இருந் தபோது, தமிழ்நாட்டுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

அதாவது, மெட்ரோ ரயில் முதல் கட்ட பணி, சேது சமுத்திர திட்டம், ரூ.1,553 கோடியில் சேலம் உருக்காலை கொண்டு வந்தது, சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சென்னை மதுரவாயல் இடையே பறக்கும் சாலை திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றியது, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் என ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் ஒன்றியத்தில் ஆளுகிற பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தது? தமிழ்நாட்டில் பங்கேற்கும் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவால் சொல்ல முடியுமா? அவர்கள் கொண்டு வந்தது என்ன? ஹிந்தி, சமஸ்கிருதம் திணிப்பு, தமிழ் புறக்கணிப்பு, நீட் தேர்வு திணிப்பு, மாநில உரிமை பறிப்பு, மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை கூட தரவில்லை. இதுதான் அவர்கள் தமிழ்நாட்டுக்கு செய்தது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப் படும் என்று ஒன்றிய நிதிநிலை அறிக் கையில் கூறினார்கள்.

மறைந்த ஒன்றிய அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். அவர் அறிவித்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் பிற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசுக்கு மனம் இல்லை. எனவே, தமிழ்நாட்டிற்கு வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த 9 ஆண்டுகளில் என்ன திட்டங்கள் செய்தார்கள்? என்று சொல்ல முடி யுமா? இதை தமிழ்நாட்டு மக்களில் ஒருவனாகவும், முதல்-அமைச்சராகவும் இருந்து கேட்கிறேன். இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் தான் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதன்பிறகு அவர் களது ஆட்சியில் நடந்த ஊரக உள் ளாட்சி தேர்தல், அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தல், நகராட்சி தேர்தல் என அனைத்து தேர்தலிலும் தோல்வி மேல் தோல்வி அடைந்த கட்சி அ.தி.மு.க ஆகும்.

ஆனால் சமீபத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகி வருகிறது. அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் கைகோர்த்து கொண்டி ருக்கிறது. இதை நினைக்கும்போது, ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது, கரையில் நின்ற வர்கள் வெள்ளத்தில் வரும் பொருட்கள் நமக்கு ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ஒருவருக்கு கருப்பாக பெரிதாக ஒரு பொருள் வந்தது. அதை எடுக்க முயன்றபோது, அது பொருள் இல்லை, அது கரடி என்று தெரிந்தது. அதன்பிறகு அந்த கரடி அவரை விடவில்லை. 

அதேபோன்று தான் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி இருக்கிறது. மக்கள் வெள்ளத்தில் இந்த இரு கட்சி களும் காணாமல் போகும்.

சசிகலாவின் காலில் விழுந்து பதவி வாங்கிய எடப்பாடி பழனிசாமி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின்பு அவரது காலையே வாரிவிட்டார். அதன்பிறகு பா.ஜனதாவுக்கு அவர் பல்லக்கு தூக்கி 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துவிட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடித்து தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்தனர். கடந்த 2 ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான எண்ணற்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகி றோம்.

மகளிருக்கு இலவச பேருந்து பய ணம், மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், மகளிருக்கு உரி மைத்தொகை ரூ.1000 என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகி றோம். எனவே, 2 ஆண்டுகள் தி.மு.க. அரசின் சாதனைகளை கட்சி தொண் டர்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நடைபெற உள்ள நாடாளு மன்ற தேர்தலில் நாற்பது தொகுதி களிலும் நாம் வெற்றி பெறப்போவது உறுதி. நாளையும் நமதே. நாற்பதும் நமதே. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

கூட்டத்தில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வழக்குரைஞர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜேந்திரன்,  மேனாள் அமைச்சர் டி.எம்.செல்வ கணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம், நாடா ளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பார்த் திபன், பொன்.கவுதமசிகாமணி, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment