நாகர்கோவில், ஜூன், 18 மாவட்ட அளவில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக் கில் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான நான் முதல்வன் திட்டம் கன்னியாகுமரி மாவட் டம் நாகர்கோவிலில் நடை பெற்றது. நிகழ்ச்சியை சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ் வளர்த்த மனோன் மணியம் சுந்தரனார் பெயரை தாங்கி நிற்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி களில் கடந்த 3 ஆண்டு களாக பட்டம் வழங்கப்படவில்லை, இக்கல்லூரியில் படித்தவர்களுக்கு ஆளுநர் விரைவில் பட்டம் வழங்க வேண்டும்.
இந்திய அளவில் பெண் கல்வி 28 சதவீதம் இருக்கும் நிலையில், தமிழ்நாடு 78 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து உள் ளது. இது தான் திராவிட மாடல் அரசின் சாதனை. ஆனால் புதிய கல்விக் கொள்கையால் தமிழ்நாடு 200 ஆண்டுகள் பின் தங்கிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment