75 ஆண்டு காலக் கனவு நனவானது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 19, 2023

75 ஆண்டு காலக் கனவு நனவானது

நீலகிரியில் பழங்குடியினர் கிராமத்துக்கு கிடைத்தது தார் சாலை!

குன்னூர், ஜூன் 19-  நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள யானைப்பள்ளம், சின்னாள கோம்பை பழங்குடியினர் கிரா மங்களுக்கு நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின் சாலை அமைக்கப்பட்டுள் ளது. இதனால், பழங்குடியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூ ரில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர்  தொலைவில் பில்லூர் மட்டம், சின்னாளகோம்பை, யானைப்பள்ளம், சடையன் கோம்பை, குரங்குமேடு ஆகிய பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள், உலிக் கல் பேரூராட்சியின் 14-ஆவது வார்டுக்கு உட்பட்டவை. இங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள், தங்களின் அத்தியாவசியத் தேவை களுக்காக 6 கிலோ மீட்டர் நடைபயணமாக பில்லூர் மட் டம் வரை வர வேண்டியிருந்தது.

மேற்காணும் கிராமங்களுக்கு செல்லும் மண் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் ஆம்பு லன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிக்கல் இருந்தது. நோயாளிகள்மற்றும் கர்ப்பிணி களை தொட்டில் கட்டி மருத்து வமனைக்கு தூக்கி செல்ல வேண்டிய நிலை இருந்தது. யானைப்பள்ளம், சடையன் கொம்பை, சின்னாளகொம்பை ஆகிய பகுதிகளில் கடந்த 2019-ஆம் ஆண்டு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாலை 5 மணிக்கு சின்னாள கோம்பை கிராமத்தில் மின்னல் தாக்கி சிறு வன் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

மழை பெய்ததால் சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டதால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மறுநாள் பல்வேறுசிரமங்களுக்கு மத்தியில் 12 பேரும், குன்னூர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். எனவே யானைப்பள்ளம், சடையன் கோம்பை, சின்னாள கோம்பை பழங்குடியின கிராமங்களுக்கு செல்லும் மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் அப்பகுதி மக் கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் உலிக்கல் பேரூ ராட்சி சார்பில் பில்லூர் மட்டம் முதல் யானைப்பள்ளம் வரை யில் 8 கி.மீ. சாலையை சீரமைக்க ரூ.8 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப் பிக்கப்பட்டது. முதற்கட்டமாக பில்லூர் மட்டத்திலிருந்து தார் சாலை அமைக்க 1.2 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது.

யானைப்பள்ளம் வரை சாலையில் உள்ள பள்ளங்கள் மூடப்பட்டு, சமன் செய்யப் பட்டது. கரோனா பரவல், நிர்வாக சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நீண்ட இழுபறிக்கு பின்னர் தொடங்கிய தார் சாலை அமைக் கும் பணிகள் தற்போது நிறை வடைந்துள்ளன.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது எங்கள் கிராமங்களுக்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை வசதி இல்லாததால் 6 கி.மீ. நடைபயணமாக பில்லூர் மட் டம் வந்து, அங்கிருந்து பேருந்து மூலம் உலிக்கல் பேரூராட்சி மற்றும் குன்னூருக்கு செல்ல வேண்டும்.

மாலை நேரமாகிவிட்டால், பில்லூர் மட்டத்தில் பேருந்து இருக்காது. இதனால் சேலாஸில் உள்ள நிழற்குடையில் தங்கி, காலையில் பில்லூர் மட்டம் சென்று, அங்கிருந்து வீடுகளுக்கு நடந்து செல்லும் நிலை இருந் தது. தற்போது தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதால், அரசுப் பேருந்து சேவை ஏற்படுத் தப்படும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

No comments:

Post a Comment