போலி ஆவணங்கள் மூலம் கனடா சென்ற 700 இந்திய மாணவர்களின் வெளியேற்றம் நிறுத்திவைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 13, 2023

போலி ஆவணங்கள் மூலம் கனடா சென்ற 700 இந்திய மாணவர்களின் வெளியேற்றம் நிறுத்திவைப்பு

ஒட்டாவா, ஜூன் 13 - போலி ஆவணங்கள் மூலம் கனடாவில் நுழைந்த இந்திய மாணவர்கள் 700 பேரை வெளியேற்றும்  நடவடிக்கையை, கனடா நிறுத்தி வைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் சத்மலா கிராமத்தைச் சேர்ந்தவர் லவ்ப் ரீத் சிங். இவர் 6 ஆண்டுக ளுக்கு முன் மாணவர் விசாவில் கனடா சென்றுள் ளார். இவருடன் கனடா சென்ற இந்திய மாணவர் கள், நிரந்தர குடியுரிமை கோரி கனடா அரசிடம் விண்ணப்பித்துள்னர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் லவ்ப்ரீத் சிங் உட்பட 700 இந்திய மாணவர்கள் பஞ்சாப்பில் இருந்து கனடாவுக்கு போலி ஆவணங்கள் மூலம் வந்துள்ளது கண்டறியப் பட்டது. இதுகுறித்து விரி வான விசாரணை நடத்திய கனடா எல்லை சேவை முகமை(சிபிஎஸ்ஏ), லவ்ப்ரீத் சிங் வரும் 13ஆ-ம் தேதிக்குள், கனடாவை விட்டு வெளியேற வேண் டும் என உத்தரவிட்டது.

இப்படியாக கடந்த 2016ஆ-ம் ஆண்டு முதல் 2020ஆ-ம் ஆண்டு வரை, 700 இந்திய மாணவர்கள் போலி ஆவணங்கள் மூலம் கனடா சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலா னோர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்க ளுக்கு ஜலந்தரில் உள்ள பயண முகவர் பிரிஜேஷ் மிஸ்ரா என்பவர், கனடா வில் உள்ள முக்கிய பல் கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பெயரில் போலி மாணவர் சேர்க்கை கடிதங்களை வழங்கியுள் ளார். இதை வைத்து மாண வர்கள் கனடாவில் படிப்ப தற்கான உரிமத்தை பெற் றுள்ளனர். இந்த போலிக் கடிதத்தை தூதரக அதிகாரி களால் கண்டுபிடிக்க முடிய வில்லை. 

கனடா சென்றபின், அந் தந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு இந்திய மாணவர்கள் சென்ற போதுதான், அவர்கள் வைத் திருந்தது போலி கடிதங்கள் என தெரிந்தது. இது குறித்து முகவர் பிரிஜேஷ் மிஸ் ராவை மாணவர்கள் தொடர்பு  கொண்டபோது, அவர் மன்னிப்பு கேட்டு, வேறு கல்லூரிகளில் சேர ஏற்பாடு செய்வதாக கூறி அவர்களை சமாளித்துள் ளார். இந்த மோசடியை கனடா எல்லை சேவைகள் முகமை (சிபிஎஸ்ஏ) கண்ட றிந்து, போலி ஆவணங்கள் மூலம் கனடா வந்த இந்திய மாணவர்கள் 700 பேரை யும் வெளியேறும்படி தாக்கீது அனுப்பியுள்ளது. 

இதையடுத்து அந்த மாணவர்கள் கடந்த 5-ஆம் தேதி முதல் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் உலக பஞ்சாபி சங்கங்களின் பன் னாட்டு தலைவரும், ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப் பினருமான விக்ரம்ஜித் சிங் சானே, கனடா அரசுக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பினார். அதில், மாண வர்கள் மோசடி செய்யவில்லை என்றும், அவர்களுக்கு போலி கடிதங்களை கொடுத்து முகவர் பணம் பெற்று மோசடி செய்துள் ளார் என விளக்கினார். 

இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கடிதங் களை சரிபார்க்காமல் விசாக்கள் வழங்கப்பட்டுள் ளன. இந்திய மாணவர்கள் கனடாவுக்குள் நுழைய குடியுரிமைத்துறையும் அனுமதித்துள்ளது. விக்ரம்ஜித் சிங்கின் வேண்டு கோள் கடிதத்தை அடுத்து, இந்திய மாணவர்களை வெளியேற்றும் நடவடிக் கையை கனடா அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாண வர்கள் நிம்மதி அடைந் துள்ளனர்.

No comments:

Post a Comment