ரூ.500 விலையில் சமையல் எரிவாயு உருளை விநியோகம் ராஜஸ்தான் காங்கிரஸ் முதலமைச்சர் துவக்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 7, 2023

ரூ.500 விலையில் சமையல் எரிவாயு உருளை விநியோகம் ராஜஸ்தான் காங்கிரஸ் முதலமைச்சர் துவக்கி வைத்தார்

ஜெய்ப்பூர், ஜூன் 7 ராஜஸ்தானில் சட்டப் பேரவைத் தேர்தல் நடை பெற இன்னும் 6 மாதங்களே இருக் கும் நிலையில் ஏழை மக்களுக்கு ரூ.500 விலையில் சமையல் எரிவாயு உருளை விநியோகத்தை முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு   தொடங்கி வைத்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஏழைகளுக்கு ரூ.500 விலையில் சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும் என்று கெலாட் அறிவித்திருந்தார். சமீபத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான சிரஞ்சீவி மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தையும் அவர் அறிவித்திருந்தார்.

"சேமிப்பும் நிவாரணமும் தான் ராஜஸ்தான் மாநில பட்ஜெட்டின் குறிக்கோளாகும். ரூ.500-க்கு சிலிண்டர் வழங்குவதன் மூலம் மக்களுக்கு நாங்கள் நிவாரணம் அளித்துள்ளோம். நாட்டில் உள்ள மக்களுக்கு சமூக பாதுகாப்பும், சுகாதார பாதுகாப்பும் கிடைக்க வேண்டும்" என்று முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்தார்.  ரூ.1150 மதிப்புள்ள சமையல் எரிவாயு உருளையை, 14 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.650 மானியம் விலையில் வழங்கினால் அரசுக்கு ரூ.60 கோடி செலவாகும் என்றும், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி 73 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கினால் ரூ.1500 கோடி அரசுக்கு செலவாகும் என்றும் கூறப்படுகிறது.

 

No comments:

Post a Comment