மதுரையில் கலைஞர் நூலகம் ஜூலை 15இல் முதலமைச்சர் திறக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 27, 2023

மதுரையில் கலைஞர் நூலகம் ஜூலை 15இல் முதலமைச்சர் திறக்கிறார்

மதுரை, ஜூன் 27- மதுரையில் கட்டப்படும் கலைஞர் நூலகத்தை ஜூலை 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 

மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.114 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டடத்திற்காக ரூ.99 கோடியும், நூலகத்திற்கான புத்தகங் களை வாங்க ரூ.10 கோடியும், தொழில்நுட்ப உபகரணங் களை வாங்க ரூ.5 கோடியும் என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூலகத்திற்கு கீழ் தளம், தரை தளத்துடன் 6 தளங்களைக் கொண்ட கட்டடமாக 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுரஅடி நிலப்பரப்பில் கட்டப்படுகிறது. இந்த நூலகத்திற்கான கட்டுமானப் பணிகளை 2022ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. அனைத்து தளங் களிலும் நவீன வசதிகளுடன் நூலகம் கட்டப்பட்டு உள்ளது. கீழ் தளத்தில் வாகன நிறுத்தம் அமைக்கப்படுகிறது.

தரைத் தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டு கூடம், மாற்றுத் திறனாளிகள் பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி அமர்ந்து படிக்கும் வகையில் வசதிகள் செய்யப் பட்டு உள்ளன. 250 இருக்கை வசதிகள் கொண்ட கலை யரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. முதல் தளத்தில் குழந் தைகள் நூலகம், வாசகர்கள் மாதம், வாரம், தினசரி பத்திரிகைகளை படிக்கும் வசதி; 2ஆவது தளத்தில் முத்தமி ழறிஞர் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் எழுதிய கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக் கியம் மற்றும் வரலாற்று புத்தகங்கள், திரைப்பட புத்தகங் கள் ஆகியவை இடம்பெற உள்ளன.

அதோடு அங்கு கலைஞர் ஆய்வகமும் அமைக்கப்படு கிறது. அந்த அரங்கத்தில் 4 ஆயிரம் ஆய்வறிக்கைகள் இடம் பெறுகின்றன. போட்டித் தேர்வு எழுதுவோருக்காக 30 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்படும். 3ஆவது தளம் 63 ஆயிரம் புத்தகங்களுடன் தமிழ் இலக்கிய பகுதியாக வும், 4ஆவது தளம் ஆங்கில நூல்களைக் கொண்ட தளமாகவும், 5ஆம் தளம் அய்ம்பெரும் காப்பியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு போன்ற நூல்கள் உள்ள பகுதி யாகவும் அமைகின்றன. 6ஆவது தளம் திறந்த வெளி படிப்பகங்கள், உணவகம் உள்ள பகுதியாக இருக்கும்.

கலைஞர் நினைவு நூலகத்தின் முன்பகுதியில் கலை ஞரின் உருவச்சிலை அமைக்கப்படுகிறது. மாடியில் மாடித் தோட்டம், அங்கு புத்தகங்களை வாசிக்கும் வசதி ஆகி யவை அமைக்கப்படும். நூலகத்திற்கான 2லு லட்சம் புத்தகங்கள் ரூ.10 கோடி செலவில் வாங்கப்பட உள்ளன. புத்தகங்களை வைக்கும் தளவாடங்கள் ரூ.16.70 கோடி செலவில் வாங்கப்பட உள்ளன. உலகத் தரத்துடன் கட்டப் படும் கலைஞர் நூலகத்தை அடுத்த மாதம் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.


No comments:

Post a Comment