பிஜேபியின் ஒன்பது ஆண்டுகால இருண்ட ஆட்சியில் ரூ.155 லட்சம் கோடி கடன் அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 12, 2023

பிஜேபியின் ஒன்பது ஆண்டுகால இருண்ட ஆட்சியில் ரூ.155 லட்சம் கோடி கடன் அதிகரிப்பு

புதுடில்லி, ஜூன் 12- நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையை பா.ஜ.க. அரசு சீர ழித்துவிட்டதாகவும், இதன் கார ணமாக மிகப் பெரிய அளவில் வேலையின்மை உருவாகி இருப் பதாகவும் காங்கிரஸ் விமர் சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் சுப்ரியா சிறினேட் செய்தியாளர்களிடம் கூறிய தாவது;-

“பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 9 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. மோடி பதவியேற்பதற்கு முன் நாட்டின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது.

அதாவது, நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து பிரத மராக பதவி வகித்த 14 பிரத மர்கள் வாங் கிய மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடி. ஆனால், நரேந்திர மோடி பிரதமரான பிறகு அவரது ஆட்சிக் காலத்தில் மட்டும் ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் கடன்சுமை ரூ.155 லட்சம் கோடி யாக உயர்ந்துள்ளது.

மோடி அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையை சீர ழித்துவிட்டது. இதன் காரணமாக மிகப் பெரிய அளவில் வேலையின்மை உரு வாகி இருக்கிறது; பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. ரூ.100 லட் சம் கோடி கடன் என்பது ஆபத்தான அளவு. நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவு நாட்டிற்கு கடன் சுமையை மோடி அரசு ஏற்படுத்தி இருக் கிறது. 

நரேந்திர மோடி அரசு ஊட கங்களை திறமையாகக் கையாண்டு பொய்களை உரக் கச் சொல்லி வரு கிறது. தனது அரசியல் எதிரிகளை திறமையற் றவர்கள், ஊழல்வாதிகள் என் றெல்லாம் விமர்சித்தவர் நரேந் திர மோடி. இந்த வார்த்தை கள் தற்போது வேறு யாரையும்விட அவருக்கும் அவரது அரசுக்குமே பொருத்தமாகி இருக்கிறது. நாட்டின் பொருளா தார நிலை குறித்து ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.” இவ்வாறு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா னேட் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment