பன்னாட்டு குறு சிறு நடுத்தர தொழில் வளர்ச்சி - ரூபாய் 1.510 கோடி முதலீடுகளுக்கு ஒப்பந்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 27, 2023

பன்னாட்டு குறு சிறு நடுத்தர தொழில் வளர்ச்சி - ரூபாய் 1.510 கோடி முதலீடுகளுக்கு ஒப்பந்தம்

சென்னை. ஜூன் 27- சென்னை வர்த்தக மய்யத்தில் இன்று (27.6.2023) நடைபெறும் பன்னாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.1,510 கோடிக்கான தொழில் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (26.6.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு அளிப்பதிலும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, ஆண்டுதோறும் ஜூன் 27ஆம் தேதி (இன்று) பன்னாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதைய டுத்து, இதை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த் தக மய்யத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பன்னாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழா ஜூன் 27 (இன்று) காலை 10.30 மணிக்கு நடை பெறுகிறது. இந்த விழாவில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் முதல் 100 பய னாளிகளுக்கு ரூ.57.55 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க ரூ.18.94 கோடி மானியத்துக்கான ஆணைகளை வழங்கி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மேலும், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தேவையை கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு மாவட்டம் கொடூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, மதுரை மாவட் டம் சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள 3 தொழிற்பேட்டைகள், குறுந்தொழில் குழும மேம்பாட்டு திட்டத்தின்கீழ் முதல் குறுந்தொழில் குழுமமாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா காடாம்புலியூரில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமம் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்கும் நோக்கிலான மெய்நிகர் கண்காட்சியகம் ஆகியவற்றையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். 

மேலும், பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் முதல் பதிப்பின்கீழ் வெற்றி பெற்ற 10 மாணவ, மாணவியர் அணிகளின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் வழங்குகிறார். இதுமட்டுமின்றி, சமச்சீர் வளர்ச்சியை முன் னெடுக்கும் விதமாக, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங் களில் இருந்தும் அனைத்து தொழில் பிரிவுகளையும் உள்ளடக்கி ரூ.1,510 கோடி மதிப்பில் 7,400 வேலைவாய்ப்பு களை உருவாக்கும் வகையில் 100 புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கடன் வசதியாக்கல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்புக்கான ஃபேம் டிஎன் (திணீவிமீ ஜிழி) மற்றும் சிட்பி (ஷிமிஞிஙிமி) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்படுகின்றன.

விழாவில், தொழில் துறையின் வளர்ச்சிக்கு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிக் கும் வகையில், மாநில அளவில் சிறந்த தொழில் முனை வோர் விருது, மாநில அளவில் சிறந்த வேளாண்சார் தொழில் நிறுவனத்துக்கான விருது, மாநில அளவில் சிறந்த மகளிர் தொழில் முனைவோர் விருது, மாநில அள வில் தரம் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்துக்கான விருது, சிறப்பு பிரிவை சேர்ந்த சிறந்த நிறுவனத்துக்கான விருது ஆகிய விருதுகளும், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங் களுக்கு சிறப்பாக நிதி வசதி வழங்கிய 3 வங்கிகளுக்கான விருதுகளையும் முதலமைச்சர் வழங்குகிறார்.

இந்த விழாவில் முதலமைச்சரால் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் ரூ.1,723.05 கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு, சுமார் 30,000 பேருக்கு இதன்மூலம் வேலைவாய்ப்பும் உருவாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment