தமிழ்நாடு மேம்பாட்டு திட்டங்களில் முதலீடு ஜப்பான் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 27, 2023

தமிழ்நாடு மேம்பாட்டு திட்டங்களில் முதலீடு ஜப்பான் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

 


ஒசாகா,மே27-
தமிழ்நாட்டில் உற் பத்தி சார்ந்த துறைகள் மட்டுமின்றி, மேம்பாட்டுத் திட்டங்களிலும் ஜப்பான் நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கவும், பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங் கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் (25.5.2023) ஜப்பானின் ஒசாகா நகருக்குச் சென்றார்.

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (யிணிஜிஸிளி) இணைந்து ஒசாகாவில் நேற்று (26.5.2023) நடத்தப்பட்ட மாபெரும் முதலீட் டாளர்கள் மாநாட்டில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற் றார். இதில் 80 ஜப்பானிய நிறுவ னங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ‘ஏர்பேக் இன்ஃப் ளேட்டர்’ தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கத் திட்டத்துக்கான புரிந் துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. டைசல் வணிக இயக்கப் பிரிவுத் தலைவர் கென் பாண்டோ, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் விஷ்ணு ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். டைசல் மேலாண் இயக்குநர் சிஹிரோ அவோகி உடனிருந்தார். 

முதலமைச்சர் 

மு.க.ஸ்டாலின் உரை

இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாடு அரசு 2024 ஜன. 10, 11ஆம் தேதிகளில் சென்னையில் நடத்தவிருக்கும் உலக முதலீட் டாளர்கள் மாநாட்டுக்கு, கூட் டாளர் நாடாக ஜப்பான் ஒத்து ழைப்புத் தரவேண்டும். ஜப்பானின் பொருளாதார, வர்த்தக, தொழில் அமைச்சகம் (எம்இடிஅய்), ஜெட்ரோ நிறுவனம், ஜப்பான் வணிக, தொழில் பேரவை (ஜேசிசிஅய்) ஆகியவற்றுடன் ஒப்பந்தங் கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கனகாவா, ஹிரோஷி மாகா ணங்கள், பேங்க் ஆஃப் டோக்கியோ உள்ளிட்ட 3 வங்கிகளுடனும் புரிந் துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட் டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.5,596 கோடி முதலீடு, 4,244 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 5 ஜப்பானிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள் ளது. இன்னும் பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

தமிழ்நாட்டில் திட்ட அனுமதி களை விரைவாகப் பெறும் வகை யில், ஒற்றைச்சாளர போர்ட்டல் 2.0 மற்றும் ‘ஜிழிஷிகீறி’ என்ற செய லியை அறிமுகம் செய்துள்ளோம். இதனால், முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

ஜப்பானிய நிறுவனங்கள் பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த துறைகளில் மட்டுமே முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. இதை சற்றே விரிவுபடுத்தி, மேம் பாட்டுத் திட்டங்களிலும் முதலீடு செய்ய முன்வர வேண்டும். தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களி லும் புதிய தொழில் பூங்காக்களை அமைத்து வருவதுடன், உள்கட்ட மைப்புகளையும் மேம்படுத்தி வருகிறோம். இவ்வாறு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

பின்னர், பல்வேறு ஜப்பானிய நிறுவனங்களின் முதன்மை அலுவலர்கள் பங்கேற்ற சந்திப்பில், ஒசாகா மாகாண துணைஆளுநர் நோபுஹிகோ யமாகுஜியை, முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, துறைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், தொழில் வணிக ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தமிழ்நாடு வழி காட்டி நிறுவன மேலாண் இயக் குநர் வே.விஷ்ணு, ஒசாகாவுக்கான இந்திய தூதர் நிகிலேஷ் கிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment