சமூகத்தை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம் ப.சிதம்பரம் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 8, 2023

சமூகத்தை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம் ப.சிதம்பரம் எச்சரிக்கை

புதுடில்லி,  மே 8 - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கருநாடக சட்டசபை தேர்தலில், மாநிலம் தாராளவாதம் கொண்ட, ஜனநாயகரீதியிலான, பன்முகத்தன்மையும், சகிப்புத்தன் மையும் கொண்ட முற்போக்கான மாநிலமாக வேண்டுமா அல்லது உள்நோக்கமுள்ள, பெரும்பான் மையான, சகிப்புத்தன்மை இல் லாத, பிற்போக்குத்தனமான மாநி லமாக மாற வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில், மாநில மக்கள் புத்திசாலித்தன மாகத் தேர்ந்தெடுப்பார்கள்.

கர்நாடகத்தின் எதிர்காலத்துக் காக, அங்கு பா.ஜ.க. வெற்றி பெறு வதையும், அந்த வெற்றியின்மூல மாக அதன் அண்டை மாநிலங் களில் அந்தக் கட்சி நுழைவதையும் நாம் தடுத்து நிறுத்தியாக வேண் டும்.

பொது சிவில் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கர்நாடக மாநிலத்தில் கொண்டு வருவதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்துள்ளதே என்று கேட்கிறீர்கள். அவை இரண்டுக்கும் சமூ கத்தைப் பிளவுபடுத்துகிற, சமூக மோதல்களைத் தூண்டி விடுகிற சாத்தியம் உண்டு.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை யில் பஜ்ரங்தளம் போன்ற அமைப் புகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற பேச்சை பா.ஜ.க. பிரச்சினை ஆக்கி இருக்கிறதே என கேட்கிறீர் கள். நாங்கள் பஜ்ரங் தளத்தை தடை செய்வோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறவில்லை.

வெறுப்புணர்வை பரப்புகிற எல்லா அமைப்புகளையும் காங் கிரஸ் எச்சரித்து இருக்கிறது. சட்டத்தின்படி காங்கிரஸ் கட்சி உறுதியான நடவடிக்கை எடுக்கப் படும் என வாக்குறுதி அளித்திருக் கிறது. தவிரவும், சட்டப்படி ஓர் அமைப்பை தடை செய்வது என்பது நிதித்துறை செயல்பாடு.

காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் பான்மை பலத்துக்கு தேவையான இடங்களைப் பெறும் என்று கர்நாடக காங்கிரஸ் மூத்த தோழர் கள் கூறுகிறார்கள். தன் மீது அவதூறு வாரி இறைக்கப்படுவதாக பிரதமர் மோடி பிரச்சினை எழுப்பி இருக்கிறாரே என்கிறீர்கள். அவதூறு வாரி இறைப்பது என் றால் என்ன என்பது பார்க்கப்பட வேண்டும். தேர்தலில் தீவிரமாக அரசியல் மொழி பேசுவது அவதூறு அல்ல. சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்கள் வீசிய அவதூறுகளை எண்ணிப் பார்ப்போமா? இது அர்த்தமற்ற செயல் ஆகும். இவ் வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment