‘மக்களைத் தேடி மேயர்’ திட்டம் தொடக்கம் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார் - சென்னை மேயர் ஆர்.பிரியா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 4, 2023

‘மக்களைத் தேடி மேயர்’ திட்டம் தொடக்கம் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார் - சென்னை மேயர் ஆர்.பிரியா

சென்னை,மே4- சென்னையில் ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 15 நாட் களுக்கு ஒருமுறை பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற உள்ளார்.

சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, 2023-2024-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்துத் தீர்வு காணும் வகையில், `மக்களைத் தேடி மேயர்’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்.

அதன்படி, சென்னையில் ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டத்தை மேயர் ஆர்.பிரியா நேற்று (3.5.2023) தொடக்கி வைத்தார். 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற உள்ளார். முதற்கட்டமாக வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை களை மேற்கொண்டார். 

சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்துவரி மற்றும் தொழில்வரி, குப்பை அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் உள் ளிட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கி பயனடையுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment