பழனி,மே30 - பழனி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ஒட் டன்சத்திரத்தில் 28-5-2023 ஞாயி றன்று காலை11-45 மணியளவில் நடைபெற்றது.
தொழிலாளரணி செயலாளர் திருச்சி.மு.சேகர் தலைமையேற்று கூட்டத்தின் நோக்கம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
மாவட்டத் தலைவர் மா.முருகன் மற்றும் மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
புலவர்.வீரகலாநிதி, ஒட்டன்சத்திர நகரத்தலைவர் வழக்குரைஞர் ஆனந்தன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் இரணி யன், ப.க பொறுப்பாளர் இராம சாமி, பழனி நகரத் தலைவர் சி.இராதாகிருட்டிணன், பழனி ஒன்றியத் தலைவர் க.மதணபூபதி, மாவட்ட மாணவர் கழக தலைவர் சம்பத், புரூஸ்பெரியார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ப.பாலன், ஜெயச்சந்திரன், சக்திவேல், வேட சந்தூர் இராமகிருஷ்ணன் உள் ளிட்டோர் கலந்துகொண்டு உரை யாற்றினர்.
இந்நிகழ்வில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
(1) மே 13இல் ஈரோடு பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்களை நடைமுறைப்படுத் துவது எனவும்,
(2) வைக்கம் போர் நூற்றாண்டு, சேரன்மாதேவி குருகுல தீண் டாமை எதிர்ப்பு போர் நூற் றாண்டு, சிந்துச் சமவெளி அக ழாய்வு நூற்றாண்டு, முத்தமி ழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிகழ்வுகளை பழனி கழக மாவட் டம் முழுதும் 10-க்கு மேற்பட்ட இடங்களில் பிரச்சார இயக்கம் மேற்கொள்வது எனவும்
(3) பழனி கழக மாவட்த்தில் கிளைக் கழகங்கள் இல்லாத இடங்களில் கிளைக்கழகங்களை உறுவாக்குதல் எனவும்,
(4) புதிய உறுப்பினர்களை சேர்த்தும் பணியைத் தீவிரப்படுத் துததல் எனவும் கழகத்தோழர்களின் கரவொலிகளிடையே ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
மேலும் இந்நிகழ்வில் மாணவர் கழகத் தோழர் நந்தகுமார் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment