திண்டிவனம் சரசுவதி சட்டக்கல்லூரியில் திராவிட மாணவர்கழகம் உதயம் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 8, 2023

திண்டிவனம் சரசுவதி சட்டக்கல்லூரியில் திராவிட மாணவர்கழகம் உதயம் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு!

திண்டிவனம், மே 8 - 6.5.2023 அன்று காலை 11-மணிக்கு திண்டிவனம் தந்தை பெரியார் படிப்பகத்தில் சரசுவதி சட்டக்கல்லூரி திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் எழுச்சியோடு நடை பெற்றது.

திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை வகித்தார்.

திராவிடர் மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் திராவிட மாணவர் கழகத்தில் இணைந்து செயலாற்றவேண்டிய அவசி யத்தை விளக்கியும், ,அறிவா சான் தந்தை பெரியார்,அன்னை மணியம்மையார், தமிழர் தலை வர் ஆகியோர் தொண்டினை விளக்கியும் உரையாற்றினார்.

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கு ரைஞர் தா.தம்பி பிரபாகரன், மண்டல செயலாளர் தா.இளம் பரிதி,  மாவட்ட தலைவர் இர. அன்பழகன், மாவட்ட செயலா ளர் செ.பரந்தாமன், ஆகியோர் மாணவர்களை வரவேற்று வாழ்த்தி மகிழ்ந்தார்கள். 

மாவட்ட அமைப்பாளர் பா.வில்லவன் கோதை, நகரத் தலைவர் உ.பச்சையப்பன், நகரச்செயலாளர் சு.பன்னீர்செல் வம்   ஆகியோர்  பங்கேற்று சிறப்பித்தார்கள்.

நிறைவாக கழகச் சொற் பொழிவாளர் இராம.அன்பழகன் மூடநம்பிக்கைகளுக்கு பலியாகாமல் பகுத்தறிவாளராக வாழவேண்டுமென்றும், அதற்கு தடையாகவிருக்கும் பழக்க வழக்கங்களை ஒதுக்கித் தள்ளவேண்டுமென கேட்டுக் கொண்டார்.

புதிய பொறுப்பாளர்கள்:

தலைவர்: மா.எழிலரசி

துணைத்தலைவர்: எ.காயத்திரி

செயலாளர்: கே.இராகவி

துணைச்செயலாளர்: எ.திவ்யா

அமைப்பாளர்:வி.விசாலி

சந்திப்பு கூட்டத்தை சிறப் பாக ஏற்பாடு செய்த மா.எழி லரசிக்கு பயனாடை போர்த்திசிறப்பிக்கப்பட்டது. ஆகஸ்ட் 5ஆம் தேதி கோவையில் நடை பெறும் திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் திரளாக பங்கேற்பது எனவும், திண்டிவனத்தில் வைக்கம் நூற்றாண்டு விழா நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.


No comments:

Post a Comment