தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வு ஊதிய ஆணைகள்: முதலமைச்சர் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 7, 2023

தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வு ஊதிய ஆணைகள்: முதலமைச்சர் வழங்கினார்

சென்னை, மே 7- தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு நிறைவை முன்னிட்டு, புதிதாக ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகளை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

தமிழ்நாடு அரசு ஆட்சி பொறுப் பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிதாக ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள், மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உயர் கல்வி உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டைகள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களை பாராட்டி கேடயங்கள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங் கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று (6.5.2023) நடை பெற்றது. 

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அனைத்து தகுதியுள்ள பயனாளிக ளுக்கும் மாதாந்திர ஓய்வூதிய தொகை யாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரு கிறது. அதன்படி, முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், வேளாண் தொழிலாளர்கள் போன்ற நலிவுற்ற பிரிவினர்களுக்கு 12 வகையான திட்டங் களின் கீழ் தற்போது 34 லட்சத்து 62 ஆயிரத்து 92 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். 

தற்போது பல்வேறு மாவட்டங்களில் இத்தகைய முதியோர் உதவித்தொகைக் கான அனுமதி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ள 64 ஆயிரத்து 98 பேர் மற்றும் புதிதாக 35 ஆயிரத்து 902 பேர் என மொத்தம் ஒரு லட்சம் பேர் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறும் வகையில் (மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தி முதல்-அமைச்சர் ஆணையிட்டார். அதன் அடிப்படையில் ஒரு லட்சம் ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில், 10 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகளை வழங்கி அந்த திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். இவர்கள் அனைவரும் ஜூன் மாதம் முதல் உதவித்தொகையை பெறத் தொடங்குவார்கள். 

புதுமைப்பெண் திட்ட பற்றுஅட்டை 

பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில் நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாக்கிட 5.9.2022 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளி களில் 6 முதல் 12ஆ-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவி களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை 5.9.2022 அன்று சென்னையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத் திட்டத்தின் மூலம், பெண்களுக்கு உயர் கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தை களின் விருப்ப தேர்வுகளின்படி அவர் களின் மேற்படிப்பை தொடர ஊக்கு வித்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்க ளின் சமூக மற்றும் பொருளாதார பாது காப்பை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது. புதுமைப் பெண் திட்டத்தின் முதற் கட்டத்தில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 210 மாணவிகளும், 8.2.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்ட 2-ஆம் கட்டத்தின் மூலம் மேலும் 94 ஆயிரத்து 507 மாண விகளும் என மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரத்து 717 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்திற்காக இதுவரை மொத்தம் ரூ.121.18 கோடி மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக, நேற்று (6.5.2023) நடந்த நிகழ்ச்சியில் 10 மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித் தொகைக்கான வங்கி பற்று அட்டை களை முதல்-அமைச்சர் வழங்கினார். 

நான் முதல்வன் திட்டம் 

தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கென தொழில் துறை யின் தேவை சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கும் நான் முதல்வன் திட்டத்தை 1.3.2022 அன்று முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 2022--2023ஆ-ம் ஆண்டு 13 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. கல்லூரி பாடத்திட்டத்தில் வழங்கப்படும் வழக்கமான பாடப்பிரிவு களுடன் சேர்த்து மாறிவரும் தொழில் நுட்ப உலகிற்கேற்ப திறன் படிப்புகளை வழங்குவதே நான் முதல்வன் திட்டம் ஆகும். துறை சார்ந்த வல்லுநர்களின் உதவியுடன் பிரத்யேக திறன்சார் பாடங்களை வடிவமைத்து, அவர்கள் கல்லூரி பாடத் திட்டத்துடனேயே சேர்த்து அவர்கள் படிக்கும் கல்லூரி களில் வழங்குவதே இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். 

இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 483 பொறியியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 972 மாணவர்களும், 842 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8 லட்சத்து 11 ஆயிரத்து 338 மாணவர் களும் பயன டைந்துள்ளனர். 

இப்பயிற்சிகளின் மூலமாக மா ணவர்கள் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வரையிலான ஊதியத்தில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். திறன் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தொடர்ச்சியாக வேலைவாய்ப்பை பெற்று தருவதற்கான முகாம்கள் கல் லூரி வளாகங்களிலேயே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

பொறியியல் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் 2022--2023ஆ-ம் ஆண்டு நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக 1 லட்சத்து 15 ஆயிரத்து 682 இறுதி யாண்டு மாணவர்களுக்கு, சீமென்ஸ், டஸ்சால்ட், மைக்ரோசாப்ட், அய்.பி. எம்., சிஸ்கோ ஆட்டோடெஸ்க் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மூலமாகவும், எல் அன்டு டி, டி.சி.எஸ்., இன்போசிஸ், என்.எஸ்.இ. போன்ற புகழ்பெற்ற உள்நாட்டு நிறுவனங்கள் மூலமாகவும் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன. 

இதன் பலனாக, தமிழ்நாடு முழுவ தும் இதுவரை நடந்துள்ள வேலை வாய்ப்பு முகாம்கள் மூலமாக 59 ஆயி ரத்து 132 மாணவர் களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற் றுள்ளது. 

மேலும், இத்தகைய வேலை வாய்ப்பு முகாம்கள் இம்மாத இறுதி வரை நடைபெறவுள்ளது. கலைக் கல் லூரி மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நான் முதல்வன் திட்டத் தின் மூலமாக 2 லட்சத்து 48 ஆயிரத்து 734 இறுதியாண்டு மாணவர் களுக்கு முன்னணி நிறுவனங்களின் பயிற்றுநர் மற்றும் பாடங்களுடன் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட்டன. இதன் பலனாக, தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் முதல் இது வரை நடைபெற்றுள்ள வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக 62 ஆயிரத்து 634 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெற்றுள் ளது. மேலும் வேலைவாய்ப்பு முகாம் கள் ஜூன் மாத இறுதிவரை நடை பெறவுள்ளது. 

மேலும், சி.அய்.அய்., டிட்கோ, சிப்காட், எம்.எஸ்.எம்.இ., எல்காட், டிஷ்.எம்ப்ளாய்மென்ட், ஸ்டார்ட்அப் டிஎன், கைடன்ஸ் டிஎன், எப்அய் சிசிஅய், நாஸ்காம் போன்ற அமைப்பு களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி மேலும் பல லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற் றுத் தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று (6.5.2023) நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் பயின்று திறன் பயிற்சி முடித்து பல்வேறு தனியார் நிறுவனங்களில் உயர்ந்த ஊதியத்துடன் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்த வர்களில் 5 பேருக்கு முதல்-அமைச்சர் கேடயங்களை வழங்கி பாராட்டி வாழ்த்தினார். அவர்களில் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம் ஊதியம் பெறும் இளைஞர்களும் இடம் பெற்றிருந்தனர். புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலமாக பயன் அடைந்த மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் மேடைக்கு வந்து, அவர்கள் பெற்ற நன்மைகளை எடுத்துக் கூறி தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர். 

No comments:

Post a Comment