தேர்தல் அறிக்கையில் முதல்-அமைச்சர் சொன்ன ஒவ்வொரு வாக்குறுதியையும் ஒவ்வொரு நாளாக நிறைவேற்றி வருகிறோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 12, 2023

தேர்தல் அறிக்கையில் முதல்-அமைச்சர் சொன்ன ஒவ்வொரு வாக்குறுதியையும் ஒவ்வொரு நாளாக நிறைவேற்றி வருகிறோம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமித உரை

சென்னை,மே12- செய்தி மக்கள் தொடர் புத் துறை சார்பில் பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கத்தில் நேற்று (11.5.2023) காலை நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலை வகித்தார். 

நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, 7 பத்திரி கையாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டையினையும், பணிக் காலத்தில் உயிரிழந்த அரசு அச்சகப் பணியாளர் களின் வாரிசுதாரர்கள் 6 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். மேலும், 1 லட்சத்து ஒன்றாவது தமிழரசு இதழ் சந்தாதாரருக்கு தமிழரசு இதழையும் வழங்கினார். இதேபோல், சென்னை தண்டையார்பேட்டை காம ராஜர் நகர், அரசு அச்சகப் பணியாளர் களுக்கு 96 புதிய குடியிருப்புகளை ரூ.34 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் கட்டு வதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையிலே சொன்னபடி, பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கும் பணி தொடங்கப்பட் டிருக்கிறது. முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் சொன்ன ஒவ்வொரு வாக்குறுதியையும், ஒவ்வொரு நாளாக நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதியை காப்பாற்றியிருக்கிறோம், நிறைவேற்றியிருக்கிறோம். பத்திரிகையாளர் நலன் சார்ந்த அரசாக என்றுமே நம்முடைய தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் அறிக் கையில் சொன்னதுபோல, முந்தைய அரசால் போடப்பட்ட அத்தனை அவ தூறு வழக்குகளையும் முதல்-அமைச்சர் அரசாணை வெளியிட்டு, அத்தனை வழக்குகளையும் ரத்து செய்தார். கரோனா நேரத்தில், பத்திரிகையாளர் களை முன்கள பணியாளர்களாக அறிவித்தது மட்டுமல்லாமல், அவர்களுக் கெல்லாம் ரூ.5 ஆயிரம் நிதி உதவி கிடைக்க செய்ததும் நம்முடைய அரசு. தொடர்ந்து, பத்திரிகையாளர்களுக்காக சேவை செய்ய நம்முடைய அரசு காத்துக்கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

எப்போதும் போல பத்திரிகையா ளர்கள் தொடர்ந்து அரசுக்கு துணை நின்று, ஏதாவது தவறு நடந்தால் அதை சுட்டிக்காட்டி, நல்லது செய்தால் எங்களை தட்டிக்கொடுத்து உங்களு டைய பணியை தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

-இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் டாக்டர்.இரா.செல்வராஜ் வரவேற் புரை ஆற்றினார். எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குநர் 

மு.அருணா நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி   சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஜான் எபினேசர் , துணை மேயர் மகேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக் குநர் த.மோகன், கூடுதல் இயக்குநர் எஸ்.எஸ். சரவணன்,  நலவாரிய உறுப்பி னர்கள் லட்சுமி, கவாஸ்கர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment