பகுத்தறிவுப் பகலவன் சிலை நிறுவ- நகராட்சி நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்டக் கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 29, 2023

பகுத்தறிவுப் பகலவன் சிலை நிறுவ- நகராட்சி நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்டக் கலந்துரையாடலில் தீர்மானம்

ராமநாதபுரம், மே 29 ராமநாதபுரத்தில் 27.5.2023 அன்று மாலை 6 மணிக்கு கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமைக் கழக அமைப்பாளர்  கே.எம்.சிகாமணி தலைமை வகித்தார். 

மாவட்டத் தலைவர் எம்.முருகேசன், ராமநாதபுரம் நகர தலைவர் பழ.அசோகன் ,  பொதுக்குழு உறுப்பினர் கயல் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர் 

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

ஈரோடு பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை செயல்படுத்துவது எனவும், 

ராமநாதபுரம் மாவட் டத்தில் மாதம் ஒருமுறை மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் நடத் துவது எனவும்,    

மாவட்டத்தில் கழகப் பேச்சாளர்களை வைத்து மாதம் ஒரு தெருமுனைக் கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

‘விடுதலை', ‘உண்மை'  சந்தாதாரர் களை சந்தித்து புதுப் பித்தல் செய்வது என முடிவு செய்யப்படுகிறது. 

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சேது சமுத் திரக் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க ஒன்றிய அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

ராமநாதபுரம் நகரில் திராவிடர் கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலையை நிறுவுவதற்கு நகராட்சி நடவடிக்கை எடுக்க இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

No comments:

Post a Comment