முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் - வேலை வாய்ப்பின்மையைப் போக்க சிறு தொழில் நிறுவனங்கள் தேவை : கனிமொழி எம்.பி. பேச்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 25, 2023

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் - வேலை வாய்ப்பின்மையைப் போக்க சிறு தொழில் நிறுவனங்கள் தேவை : கனிமொழி எம்.பி. பேச்சு

சென்னை, மே 25  சமூகத்தில் சிறுதொழில் நிறுவனங்களின் பங் களிப்பு குறித்து உரக்க பேச வேண் டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். 

இணையதள சில்லறை விற்ப னையாளர்கள் மற்றும் வணிகர்கள் அமைப்பு சார்பில் இந்திய நிறு வனங்களின் எதிர்காலத்துக்கான ஆதாரம் என்ற தலைப்பில் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (24.5.2023) கருத்தரங்கம் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசியதாவது: 

சமூகத்தில் சிறு தொழில் நிறுவனங்கள் குறித்து விவாதிக்க வேண்டியது அவசியம். ஆனால் நாம் அனைவரும் கோடி கணக்கில் முதலீடு செய்யும் பெரிய தொழில் நிறுவனங்கள் குறித்து பேசுகிறோம். அவர்களோ தொழில்நுட்பம் வளர, வளர தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களே வழங்கி வருகின்றன.

அந்த நிறுவனங்கள்தான் உற் பத்தி மற்றும் ஏற்றுமதியில் குறிப் பிடத்தக்க பங்களிப்பையும் செய் கின்றன. நாட்டில் அதிகளவு சிறு தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அறிந்ததாலேயே சிப்காட், சிட்கோ ஆகியவற்றை மறைந்த மேனாள் முதலமைச்சர்  கலைஞர் தொடங்கினார். அவரைப் போலவே, சிறு தொழில் நிறுவன பிரதிநிதிகளுக்கு ஒன்றிய, மாநில அரசுகளிடம் ஏராளமான எதிர் பார்ப்புகள் இருப்பதை என்னாலும் புரிந்து கொள்ள முடிகிறது. குறிப் பாக அவர்களுக்கு வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவதில் பிரச் சினை இருக்கிறது. கடன்களை திருப்பி வழங்காத கார்ப்பரேட்டு களுக்கு கோடி கணக்கில் வழங்கும் வங்கிகள், ரூ.50 லட்சம், ரூ.1 கோடி போன்ற தொகைக்கே கோடி முறை சிந்திப்பதோடு, கடன் தராமல் இருப்பதற்கான வழிகளையே தேடிப் பிடிக்கின்றன. இத்துறையின் முக்கியத்துவத்தை பொதுமக்களும் அறிந்து கொள்ளவில்லை. சமூகம், அரசின் வருவாய், வேலைவாய்ப்பு போன்றவற்றில் சிறு தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து நாம் பேசுவதில்லை. இதுகுறித்து உரக்க பேச வேண்டும். நிறுவனங் களின் கோரிக்கைகளை நிச்சயம் நாடாளுமன்றத்திலும், தமிழ்நாடு அரசிடமும் எடுத்துரைத்து, துறையை மேலும் மேம்படுத்துவ தற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வோம்.

நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மை பிரச்சினைக்கு சிறு தொழில் நிறுவனங்களில் அதிகளவு முதலீடு செய்வதன் மூலம் தீர்வு காணலாம். அனைவரையும் உள் ளடக்கிய நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சிக்கு சிறு தொழில் நிறுவனங்கள் பேருதவி புரியும். இவ்வாறு அவர் பேசினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறுகையில், “எந்த வித ஆதாரமும் அடிப்படையும் இல்லா மல் எதிர்க்கட்சித் தலைவர் விமர் சிக்கிறார். முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தின்போது கோடிக்கணக்கில் முதலீடு வருகி றது. இது தெரிந்தும் அரசியல் செய்ய வேண்டும் என்பதால் விமர்ச னங்கள் முன்வைக்கப்படுகின்றன. புதிய  நாடா ளுமன்ற கட்டடத் திறப்பு முறையாக நடத்தப்படவில்லை, அதனால் நாங்கள் பங்கேற்கவில்லை" என்றார்.


No comments:

Post a Comment