ஜார்க்கண்ட் முதலமைச்சருடன் - பீகார் முதலமைச்சர் துணை முதலமைச்சர் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 11, 2023

ஜார்க்கண்ட் முதலமைச்சருடன் - பீகார் முதலமைச்சர் துணை முதலமைச்சர் சந்திப்பு

 ராஞ்சி மே 11 அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் பீகார் மாநில முதல மைச்சர்  நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில், மேற்கு வங்காள மாநில முதல மைச்சர் மம்தா,  சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை நிதிஷ்குமார் சந்தித்தார். 

அகிலேஷ் யாதவுடன் சேர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தார். அப்போது, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்ட உறுதி பூண்டனர். 9.5.2023 அன்று ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை நிதிஷ்குமார் சந்தித்தார். இந்நிலையில், நேற்று (10.5.2023) ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிக்கு நிதிஷ் குமாரும், பீகார் மாநில துணை முதல மைச்சர் தேஜஸ்வி யாதவும் சென்றனர். அங்கு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வீட்டுக்கு இருவரும் சென்றனர். ஹேமந்த் சோரனை சந்தித்து பேசினர். அரசியல் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்திய தாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செய்தித் தொடர்பாளர் வினோத்குமார் பாண்டே கூறினார்.

No comments:

Post a Comment