திருவையாறு, மே 29- திருவையாறு தேரடி அருகில், திரு வையாறு ஒன்றிய கழகத்தின் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் ‘திராவிட மாடல்' ஆட்சி விளக்க தெருமுனைக் கூட்டம் 24.05.2023 அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. புரட்சிக்கவிஞர் கலைக்குழு சார்பில் மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு, மகளிரணி தோழர் கலைச்செல்வி ஆகியோர் இயக்கப் பாடல்கள் பாடினர்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இர.மணிகண்டன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன் தலைமையேற்று உரை யாற்றினார். தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநில இளைஞரணி துணை செயலாளர் முனைவர் வே.இராஜவேல், திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின் ஆகியேர் முன்னிலையேற்று உரையாற்றினர். தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தொடக்கவுரை யாற்றினார்.
மாநில ப.க. துணை தலைவர் கோபு.பழனிவேல், நெய் வேலி வெ.ஞானசேகரன், தலைமை கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர்கள் இரா.குணசேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை நிகழ்த்தினர்.இறுதியாக கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் சிறப்புரையாற்றினார். துரை.ஸ்டாலின் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் குடந்தை மாவட்ட அமைப்பாளர் அழகுவேல், பூதலூர் ஒன்றிய தலைவர் அள்ளூர் இரா.பாலு, தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் மாத்தூர் பா.சுதாகர், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் க.அரங்கராசன், திருவையாறு ஒன்றிய அமைப்பாளர் மு.விவேக விரும்பி, தஞ்சை மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், திருவையாறு ஒன்றிய துணைத் தலைவர் கோ.கவுதமன், திருவையாறு நகர தலைவர் அ.கவுதமன், பெரியார் பெருந்தொண்டர் வளப்பகுடி கோ.தங்கவேல், விளாங்குடி ஒவியர் புகழேந்தி, குடந்தை மகளிரணித் தோழர் ராணி குருசாமி, தஞ்சை மாநகர இளைஞரணி துணை தலைவர் அ.பெரியார் செல்வம் மற்றும் கழகத் தோழர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment