'நீட்'டால் தொடரும் சோகம் மேலும் ஒரு மாணவர் தற்கொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 18, 2023

'நீட்'டால் தொடரும் சோகம் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

 நாட்டறம்பள்ளி, மே 18 திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜங்களாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பரமேஸ்வரன் (வயது 17). இவர் பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்றார். கடந்த மே 7-ஆம் தேதி நீட் தேர்வை பரமேஸ்வரன் எழுதினார். தேர்வை சரிவர எழுதவில்லை என்று தெரிகிறது. இதனால் பரமேஸ்வரன் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று  (17.5.2023) இரவு திடீரென வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதனைக் கண்ட பெற்றோர் அவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென் றனர். அங்கு பரிசோதனை செய்த மருத் துவர்கள் பரமேஸ்வரன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து செந்தில்குமார் நாட் டறம்பள்ளி காவல்துறையில் புகார் அளித்தார். பரமேஸ்வரன் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற் கூராய்வுக்காக அனுப்பி வைத் தனர்.

மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு முடிவுக்கு பயந்து மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.



No comments:

Post a Comment