சென்னை, மே 10 - வேளாண்மை துறையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் தேவைகளை உணர்ந்து சந்தையின் தேவைக்கேற்ப புதிய தொழில் நுட்பத் தயாரிப்புகளை தொடர்ந்து அளித்து வரும் சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க சிந்தனையில் கருவிகளைத் தயாரிப்பதோடு விவசாயிகளுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் வடிவத்தில் செயல்திறன் கொண்ட பல வகையான டிராக்டர்களை அதிகத் திறன் மிகுந்த என்ஜினைக் கொண்டவையாக அளிக்கின்றன.
இந்நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒட்டு மொத்தமாக 12,590 டிராக்டர்களை விற்பனை செய்து, ஒட்டுமொத்த டிராக்டர் விற்பனைச் சந்தை யில் 1.9 சதவீத சந்தையைக் கைப்பற்றியுள்ளது என இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் நிறுவனத்தின் இணை நிருவாக இயக்குநர் ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment