இதுதான் ஆர்.எஸ்.எஸ். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 16, 2023

இதுதான் ஆர்.எஸ்.எஸ்.

பெண்ணின் நிர்வாண புகைப்படத்திற்காக இராணுவ இரகசியத்தைக் காட்டிக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ். இராணுவ அதிகாரி!

புனே, மே 16 மகாராட்டிராவின் புனே நகரில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவில் (பொறியியலாளர்கள்) தலைவராக பதவி வகித் தவர் பார்ப்பனரான பிரதீப் குருல்கர் (வயது 59). பாகிஸ் தான் நாட்டு அமைப்புகளுக்கு தகவலைப் பகிர்ந்து உள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாராட்டிரா பயங்கரவாத ஒழிப்புப் படை அவரை அண்மையில் கைது செய்தது. இதற்காக அவர் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணமும் மேற்கொண்டுள்ளார் எனக் கூறப்படு கிறது. அதுபற்றிய விசாரணையும் நடந்து வருகிறது. 

தடய அறிவியல் சோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டன

இதனைத் தொடர்ந்து பயங்கரவாத ஒழிப்புப் படைக் கான (ஏ.டி.எஸ்.) நீதிமன்றத்தில் அதற்கான ஆவணங் களை அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். அணு ஆயுதம் சுமந்து செல்லும் திறன் பெற்ற அக்னி ஏவுகணைத் திட்டம் உள்பட பல்வேறு ஏவுகணை திட்டங்களில் அவர் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுக்கும் பணியில் முக்கிய பங்காற்றி வந்துள்ளார். வருகிற நவம் பரில் அவர் ஓய்வு பெற உள்ள நிலையில், இயக்குநர் தகுதியிலான பதவியில் இருந்து சில நாள்களுக்கு முன் புனே நகரிலுள்ள மற்றொரு டி.ஆர்.டி.ஓ. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் என அதிகாரி ஒருவர் கூறினார். அவரிடம் இருந்து லேப்டாப், ஹார்டு டிஸ்குகள், கைப்பேசிகள் உள்பட பல பொருட்கள் கைப்பற்றப் பட்டன. அவை தடய அறிவியல் சோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

அவர், பாகிஸ்தானிய உளவு அமைப்பைச் சேர்ந்த பெண்ணுடன் தொடர்ந்து, தொடர்பில் இருந்து வந்த துடன், வாட்ஸ்அப் செய்திகள், குரல் மற்றும் வீடியோ கால்கள் வழியேயும் ரகசிய செய்திகளை பகிர்ந்து வந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத் தில், முன்பே அவருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு இருந்தும், அதனை அவர் கவனத்தில் கொள்ளாமல் இருந்துள்ளார். 

‘ஹனி டிராப்' முறையை பயன்படுத்தி...

புனேவில் உள்ள டி.ஆர்.டி.ஓ. வளாகத்தில் கடந்த ஆண்டு, ‘ஹனி டிராப்' பற்றிய நிகழ்ச்சி ஒன்று நடத்தப் பட்டது.  அதில், பெண்களின் வலையில் சிக்காமல் தவிர்ப்பது எப்படி என்பது பற்றி வகுப்பு எடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களில் குருல்கரும் ஒருவர். இந்தியாவில் உள்ள முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளின் தகவல்களை, அவர்களது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக ஊடக வலைதளங்கள் வழியே எடுத்துக் கொள்கின்றனர். பாகிஸ்தானின் அய்.எஸ்.அய். உளவு அமைப்புகளால் பணம் கொடுத்து ஊக்குவிக்கப்படும் பெண்கள் உள்ளிட்ட நபர்கள் இந்த ‘ஹனி டிராப்' முறையைக் கொண்டு இவற்றைப் பயன்படுத்தி தங்களது வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

இதற்காக நூற்றுக்கணக்கில் போலியான சமூக ஊடக கணக்குகள் தொடங்கப்படுகின்றன. இதன்பின், இந்திய பெண்களின் பெயர்களான நேஹா ராஜ்புத், நேஹா குப்தா, ஜாரா தாஸ் குப்தா போன்ற பெயர்களை வசீ கரிப்பதற்காகப் பயன்படுத்தி, முக்கிய உளவு அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் தூதர்கள் போன்றோரை தங்கள் பிடியில் சிக்க வைக்கின்றனர். குருல்கரை, ஜரா தாஸ் குப்தா என்ற பெயரில் அணுகிய பெண் ஒருவர், இவரது நட்பு வளையத்தில் சிக்கிய போது முதலில் அரை நிர்வாணப் படங்களை அனுப்பி உள்ளார்.  ஆனால் இவரோ முழு நிர்வாணப் படங்களை அனுப்பக் கூறி அதற்குப் பணம் தந்துள்ளார், இவருடைய விவகாரத்தில் எடுத்து கொண்டால், டி.ஆர்.டி.ஓ. வலைதளத்தில் அவரது முழு விவரமும் கிடைக்க பெறுவதுடன், முக்கி யம் வாய்ந்த திட்டப் பணிகளில் அவர் ஈடுபடும் விவரங் களும் கூட விரிவாக காணக் கிடைக்கின்றன. இதனால், அவரை பெண்களைக் காட்டி வீழ்த்துவதற்கு முடிவு செய்துள்ளனர்.  இதனால், முக்கிய உயரதிகாரிகளின் எந்தெந்த விவரங்கள் வலைதளங்களில் பகிரப்பட வேண்டும் என்பது பற்றிய பரிந்துரைகளை வழங்குவது என பயங்கரவாத ஒழிப்புப் படை திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில், புனே நகர சிறப்பு பயங்கரவாத ஒழிப்புப் படை (ஏ.டி.எஸ்.) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப் பட்ட அவரை பயங்கரவாத ஒழிப்புப் படையின் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

சிறப்பு பயங்கரவாத ஒழிப்புப் படைக்கான நீதிமன்றத்தில் இன்று ஆஜர்!

‘ஹனி டிராப்'பில் (பெண்களின் வலையில்) சிக்கி உளவு தகவல்களை பகிர்ந்த அவருக்கு மே 15 ஆம் தேதி (நேற்று) வரை ஏ.டி.எஸ். காவல் விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த காவல் முடிவடைய உள்ள நிலையில், அவர் மீண்டும் புனே நகர சிறப்பு பயங்கரவாத ஒழிப்புப் படைக்கான நீதிமன்றத்தில் இன்று (16.5.2023) ஆஜர் செய்யப்பட்டார்.  அவரை நாளை வரை பயங்கரவாத ஒழிப்புப் படையின் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

இதனைத் தொடர்ந்து, அவர் மீண்டும் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ‘தேசபக்தி பாடம்' எடுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர ஆதரவாள ரான பார்ப்பனர் பிரதீப் குருல்கர்  நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஹிந்துத் துவ அமைப்பின் நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டு பேசி வருகிறார்.  சில மாதங்களுக்கு முன்பு இவர் சாவர்கர் குறித்த ஒரு நிகழ்ச்சியில் தலைமை விருந் தினராகக் கலந்துகொண்டார்   என்பது குறிப்பிடத் தக்கது.


No comments:

Post a Comment