10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மே 19 வெளிவரும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 16, 2023

10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மே 19 வெளிவரும்

சென்னை, மே 16 - எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கடந்த ஏப்.6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்.5ஆம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 7.88 லட்சம் பேர் எழுதினர். பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 8ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, மே 19ஆம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா நேற்று (15.5.2023) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஅய்) உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டடத்தில் மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும்.

www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவு எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மய்யம்  (NIC), அனைத்து மய்ய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறியலாம். மாணவர்கள், தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப் பித்தபோது அளித்த அலைபேசி எண்ணுக்கு குறுந் தகவல் (எஸ்எம்எஸ்) மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment