கன்னியாகுமரியில் உலக புத்தக நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 24, 2023

கன்னியாகுமரியில் உலக புத்தக நாள்

குமரி மாவட்ட கழக சார்பாக உலக புத்தக நாள் நிகழ்ச்சி நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடை பெற்றது. மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட கழக இளைஞரணி செயலா ளர் எஸ். அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார். உலக புத்தக நாளில் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மற்றும் அறிஞர் பெருமக்களின் நூல்கள் திராவிட இயக்க நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நூல்கள் பரப்புரை செய்யப்பட்டு பலரும் நூல்களை வாங்கிச்சென்றனர். புத்தகங்களின் புத்தாக்கம் குறித்து பொதுமக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா.கோகுல், மாநகர கழக துணைத் தலைவர் கவிஞர் செய்க்முகமது தோழர் ரெகுராஜன் புத்தக ஆர்வலர் இராஜா உட்பட பலரும் ஆர்வமுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment