கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இறுதி கட்டத்தில் பணிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 5, 2023

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இறுதி கட்டத்தில் பணிகள்

சென்னை,ஏப்.5- சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டுவதற்கு கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கிருந்து தென் மாவட் டங்களுக்கு செல்லும் பேருந்துகளை இயக்க திட்டமிடப் பட்டுள்ளது. 

இதற்கான பணி சுமார் 88 ஏக்கர் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் நடந்து வருகிறது. புதிய பேருந்து நிலைய பணி திட்டமிட்டபடி 2 ஆண்டுகளில் முடிக்கப் பட்டு 2022ஆம் ஆண்டு அக்டோ பர் மாதத்தில் திறந்து இருக்க வேண்டும். ஆனால்  கரோனா பரவலால் ஊரடங்கு உள்ளிட்ட கார ணங்களால் கட்டுமான பணி யில் தாமதம் ஏற்பட்டது. தற்போது புதிய பேருந்து நிலைய பணி  வேகமாக நடந்து வருகிறது.  தினந்தோறும் 1.5 லட்சம்  பயணிகளை கையாளும் வகையில் இந்த புதிய  பேருந்து நிலையம் அனைத்து நவீன வசதிக ளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 200 பேருந்துகள், 270 கார்கள் மற்றும் 3 ஆயிரத்து 500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டு மானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சூரிய மின் தகடுகள் பொருத்தி மின்சாரம் பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய பணிகள் முழுவதும் முடியும் நிலையில் உள்ளது. கடைசி கட்ட பணிகள் மட்டும் நடந்து வருகின்றன. இந்த பணியில் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும் என்று தெரிகிறது.

மேலும் பயணிகள் காத்திருப்பு கூடத்தில் தரை தளம் அமைக்கும் பணியும் நாற்காலிகள் அமைக்கும் பணியும் இறுதி கட்டத்தில் உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பகுதி யில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பேருந்துகள் உள்ளே நுழைய 2 வழிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்காக பேருந்து நிலையத்தின் பின்புறம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அய்யஞ்சேரி சாலை சீரமைக்கப்பட்டு 

ஜி.எஸ்.டி. சாலையுடன் இணைக்கப்பட இருக்கிறது. மேலும் ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக பேருந்து நிலையம் அமைக்க அதி காரிகள் திட்டமிட்டு உள்ள னர்.இதற்காக வண்டலூர் வெளிவட்ட சாலையில் சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வரதராஜபுரம் ஏற்ற இடமாக இருக்கும் என்று அதிகாரிகள் தேர்வு செய்து உள்ளனர். திருவள்ளூர் நகர  பேருந்துகளை படப்பை  மேம்பாலம் மற்றும் மதுரவாயல் வழியாக இயக்க முடிவு செய்துள்ளனர். இதே போல் ஊரப்பாக்கம் மற்றும் வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புறநகர்  ரயில் நிலையம்  அமைக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment