குட்கா- பான் மசாலா புகையிலைக்கு தடை நீடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 26, 2023

குட்கா- பான் மசாலா புகையிலைக்கு தடை நீடிப்பு

புதுடில்லி, ஏப். 26 உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன் றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. இதன் மூலம் குட்கா தடை தொடர்கிறது. 

கடந்த 2006ஆ-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாது காப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவுப் பாது காப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இது தொடர்பான அறிவிப் பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனால், அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகை யிலையை உணவுப் பொருளாக சுட்டிக்காட்டவில்லை. சிக ரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட் டத்தில் புகையிலைப் பொருட் களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவதைப் பற்றியே தெரிவிக்கப்பட்டுள்ளது. புகை யிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்க இந்த இரு சட் டங்களும் வழிவகை செய்ய வில்லை. தடை விதிக்கும் அதி காரத்தையும் வழங்கவில்லை. குறிப்பிட்ட வழக்குகளில் நீதி பதிகள், உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட் டுள்ளது. எனவே, உணவு பாது காப்பு ஆணையர் தனது அதி காரத்தை மீறி, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து, அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. 

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வில் நேற்று (25.4.2023)  விசாரணைக்கு வந்தது. அப் போது புகையிலை தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில், "நாட் டில் உள்ள அய்ந்து உயர்நீதி மன்றங்கள், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் புகையிலைக்கு முழுமையாக தடை விதித்த போது, அது சரியானது அல்ல என கூறியிருந்தது. மேலும், புகையிலைப் பொருட்கள் வெறும் மெல்லும் பொருட்கள் தானே தவிர, அவை விழுங்கப் படுவதில்லை என்பதால் அவற்றை உணவுப் பொருட் களாக கருதக்கூடாது. தமிழ்நாடு அரசு தனது அதி காரத்தை தவறாக பயன்படுத்தி புகையிலை, குட்கா பொருட் களை தடை செய்துள்ளது. இந்த விவகாரத் தில் ஒன்றிய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது" என்று வாதிடப் பட்டது. அப்போது தமிழ்நாடு அரசுத் தரப்பில், "கடுமையான சுகாதார பிரச் சினைகளை ஏற்படுத்தும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட் களை தடை செய்வது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்ய ஏற்கெனவே ஒன்றிய அரசு அறிவு றுத்தல் வழங்கியிருந்தது. அதனடிப்படையில்தான் தமிழ் நாட்டில் சுகாதார கண்ணோட் டத்துடன் புகையிலை, குட்கா பொருட்கள் தடை செய்யப் பட்டன. புகையிலை நிறுவ னங்கள் வர்த்தக நோக்கில் புகை யிலைப் பொருட்களை விற் பனை செய்ய அனுமதி கோரு கிறார்கள். ஆனால் மக்களின் சுகாதாரத்தை மனதில் கொண்டு அரசு அதற்கு தடை விதித் திருக்கிறது. சில தனி நபர் களுடைய லாபத்திற்காக பொது மக்களின் சுகாதாரத்தில் அரசு சமரசம் செய்து கொள்ள முடி யாது. புகையிலைப் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் புற்று நோய் உள்ளிட்ட நோய்களுக்காக செலவு செய் வதும் அதற்காக அரசுகள் செலவு செய்வதும் விரயமாகும்" என்று வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதிகள், புகையிலைப் பொருட்கள்கூட உணவுப் பொருட்களாக கணக் கில் எடுத்துக் கொள்ளப்படு கிறதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசு, "இத்தகைய புகையிலைப் பொருட்களை ஏதாவது ஒரு உணவு பொருளுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது அது உடல் நலத்துக்கு கடும் தீங்கை விளைவிக்கும்" என தெரிவிக்கப் பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் முடிவு சரி யானதுதான் என்றும், எனவே தமிழ்நாடு அரசின் முடிவை ரத்து செய்த சென்னை உயர்நீதி மன்ற ஆணைக்கு இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட் டனர். மேலும், பாதிக்கப்பட்ட புகை யிலை நிறுவனங்கள் உரிய அமைப்புகளை நாடி தங்களுக்கு தேவையான நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.


No comments:

Post a Comment