மாணவர்களுக்கு சிறு சேமிப்பு திட்டம் - அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 23, 2023

மாணவர்களுக்கு சிறு சேமிப்பு திட்டம் - அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தகவல்

 ªசென்னை, ஏப்.23  மாணவ, மாணவி யரின் நலன் கருதி எதிர்காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் சிறுசேமிப்பு திட்டம் தொடங்குவதற்கான நடவ டிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தெரிவித்தார். 

சென்னை, தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், 2023-_2024ஆம் ஆண்டிற்கான பேரவையில் அறிவிக்கப் பட்ட திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச் சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமை யில் அனைத்து உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது. 

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பேசியதாவது: மாணவ, மாணவியர் களின் நலன் கருதி எதிர் காலத்தில் கூட்டுறவு வங் கிகள் மூலமாக சிறு சேமிப் புத் திட்டம் தொடங்குவ தற்கான நடவடிக்கை எடுக் கப்படும். தமிழ் நாட்டில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வாடிக் கையாளர்களுக்கு கடன் வழங்குவது, வசூலிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு வதை தவிர்த்து முழுநேர வங்கியாக செயல்படுவதற்கான அனைத்து நட வடிக்கைகளும் கூட்டுறவுத்துறை வாயிலாக எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், இச்சங்கங்கள் மூலம் 24 வகையான பொருட்கள் பொதுமக் களுக்கு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நலிவடைந்து செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் லாபத் துடன் செயல் படுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.   ஊருக்கு ஒரு சேமிப்பு கிடங்கு கட்டு வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறு வணிகர்களின் நலனைக் கருதி 5 கிலோ மற்றும் 2 கிலோ எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை அறிமுகப் படுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment