சென்னை -மதுரை உயர்நீதிமன்ற வளாகங்களில் டிரோன் பறக்கத் தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 12, 2023

சென்னை -மதுரை உயர்நீதிமன்ற வளாகங்களில் டிரோன் பறக்கத் தடை

சென்னை, ஏப்.12 தமிழ்நாட்டில் தலைமை செயலகம், ராஜ்பவன், விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங் களில் பாதுகாப்பு கருதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை கட்டடங்கள், நீதிமன்ற வளாகம் ஆகிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை உயர் நீதிமன்ற பதிவாளர் (நிர்வாகம்) வெளியிட்டுள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற அதி காரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment