பாகிஸ்தானைவிட இந்தியாவில் முஸ்லிம்கள் பாது காப்பாக உள்ளனர் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் பேசியிருக்கிறார்.
ஒரு வெளிநாட்டில், இன்னொரு நாட்டைப்பற்றி இப்படி கருத்துத் தெரிவிப்பது பன்னாட்டுப் பிரச்சினை ஆகாதா? இந்திய நிதியமைச்சரின் இந்தப் பேச்சைக் கண்டித்து மற்ற நாடுகள், கண்டனக் குரல் எழுப்புவதற்கு வாய்ப்பு உள்ளதா, இல்லையா?
ராகுல் காந்திக்கு ஒரு நியாயம்? நிர்மலா சீதாராமனுக்கு இன்னொரு நியாயமா?
ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்பது இதுதானோ!
No comments:
Post a Comment