டில்லியில் சமூகநீதிக்கான தேசிய மாநாடு: காணொலிவழி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 3, 2023

டில்லியில் சமூகநீதிக்கான தேசிய மாநாடு: காணொலிவழி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை உரை

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும்  

அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்பு!

சென்னை, ஏப். 3- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் சமூகநீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் தேசிய மாநாடு, டில்லியில் இன்று (3.4.2023) நடை பெறுகிறது. 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு, டில்லியில் இன்று (3.4.2023) மாலை 4.30 மணிமுதல் இரவு 7 மணி வரை நடை பெறுகிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள், மேனாள் அமைச் சர்கள், நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் ஆகியோர் காணொ லிக் காட்சி மூலமாக கலந்து கொள்ள உள்ளார்கள்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றுகிறார். சமூக நீதிக்கான போராட்டத்தையும், சமூக நீதி இயக்கத்திற்கான தேசிய கூட்டு திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

திராவிட இயக்கம் சமூக நீதி மற்றும் சமூக சீர்திருத்த இயக்கமாக செயல்பட்டதால் தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வலிமையான அரசியல் இயக்கம் அவசியம் என்பதை உணர்ந்து பேரறிஞர் அண்ணா 1949 ஆம் ஆண்டில் தி.மு.க.வை தொடங் கினார். அன்றிலிருந்து 74 ஆண்டு களுக்கும் மேலாக ஒரு பொறுப் புள்ள, சமூக நீதி, திராவிட இனம், மொழி, கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் அருமை பெருமை களை, பாரம்பரியத்தை வெற்றிகரமாகப் பாதுகாத்து போற்றி வளர்த்து வருகிறது தி.மு.க. ஒரு சீர்திருத்த இயக்கம், அரசியல் பரிணாமம் பெற்று, ஆட்சியைப் பிடித்து, பேசிய கொள்கை களை நிறை வேற்றும் சட்டங்களை இயற்றும் தகுதியை அடைந்தது, இந்திய அரசியல் வரலாற்றில் திரா விட இயக்கத்துக்கு கிடைத்திருக் கக்கூடிய மிகப் பெரிய பெருமை. பேரறிஞர் அண்ணாவை தொடர்ந்து விளிம்பு நிலையில் உள்ள மக்களும் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மேம்பாடு அடைந்திட வேண்டும் என்ற உயரிய நோக் கத்தோடு பல்வேறு திட்டங்களை முத்தமிழறிஞர் கலைஞர் செயல்படுத்தினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில், அனைத்து துறையின் வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்ற நோக்கில் பெருமைமிகு திராவிட மாடல் ஆட்சி நடந்து வரும் இவ்வேளை யில் இத்தகைய சமூக நீதிக்கான மாநாடு நடைபெறுவது சிறப்பிற் குரியது. சமூகம், அரசியல், பொரு ளாதாரம், மக்கள் மேம்பாடு அனைத் திலும் நவீனமயம் என்கிற திராவிட மாடல் ஆட்சியை தமிழ் நாடு அரசு நடத்தி வரும் நிலையில், சமூக நீதியை தேசிய அளவில் முன்னெ டுத்துச் செல்லும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள் ளது. 

மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு

இம்மாநாட்டில் சமூக நீதிக் கான அகில இந்திய கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற நீதிபதி வி.ஈஸ்வரய்யா வரவேற்புரை ஆற்றுகிறார். ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினரு மான பி.வில்சன் முதன்மை உரையாற்றுகிறார். சிறப்பு விருந்தினர்களாக ராஜஸ் தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச மாநில எதிர்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பரூக் அப்துல்லா, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரைன், தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், மேனாள் மராட்டிய துணை முதலமைச்சருமான சஜன் சந்திரகாந்த் புஜ்பால், ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப் பினர் சஞ்சய் சிங், பீகார் - ராஷ்டிரிய ஜனதா தள நாடாளுமுன்ற உறுப் பினர் மனோஜ் குமார் ஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இ.டி.முகமது பஷீர், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கேசவ ராவ், ராஷ்டிரிய சமாஜ் பக் தேசிய தலைவரும், மராட்டிய மாநில மேனாள் அமைச்சருமான மகாதேவ் ஜன்கர், அசாம் நாடா ளுமன்ற உறுப்பினர் நபா குமார் சாரானியா, அரியானா லோக் தந்திர சுரக்சா கட்சியின் மேனாள் எம்.பி.ராஜ்குமார் சயினி ஆகி யோர் கலந்து கொள் கிறார்கள். 

ஆசிரியர் கி.வீரமணி, வைகோ பங்கேற்பு 

தமிழ்நாட்டில் இருந்து திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., தமி ழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள். 

இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment