டில்லியில் அம்பேத்கர் பெயரிலுள்ள பல்கலைக் கழகத்திலேயே அம்பேத்கருக்கு அவமதிப்பா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 19, 2023

டில்லியில் அம்பேத்கர் பெயரிலுள்ள பல்கலைக் கழகத்திலேயே அம்பேத்கருக்கு அவமதிப்பா?

புதுடில்லி, ஏப்.19- டில்லியில் அம்பேத்கர் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரிய மாணவர் மன்றம் ஒருங் கிணைப்பில் 13.4.2023 அன்று ஜோதி பாபுலே, அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கல்லூரி பாதுகாப்பு பணியாளர்களைக் கொண்டு நிகழ்வினை தடுக்க கல்லூரி நிர்வாகம் முயற்சி செய்தது. அதனை முறியடித்து படக் கண்காட்சி மற்றும் பல ஜாதி ஒழிப்பு கலாச்சார நிகழ்வுகளை தோழர்கள் நடத்தி முடித்தனர். நிர்வாகத்தின் முயற்சி பயனளிக்காத நிலை யில், நாடுதழுவிய அளவில் பார்ப்பனரல்லா தாராகிய திராவிடர்களின் உரிமைகளுக்காக, முன்னேற்றத்திற்காகப் போராடிய சமூக நீதி தலைவர்களான டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், ஜோதி பாபுலே, சாவித்திரி பாய் புலே  மற்றும் கன்சிராம் ஆகியோரின் படங் களைக் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசி அவமதித்துள்ளனர். 

பல்கலைக் கழக நிர்வாகத்தில் ஊடுரு வியுள்ள பார்ப்பனிய ஜாதி ஆணவவெறி யர்களின் இவ்விழிசெயலைக் கண்டித்து மாணவர்கள் வெகுண்டெழுந்தனர்.

இது தொடர்பாக நிர்வாகத்திடம் மாண வர்கள் அளித்த புகாரின்மீது எந்த நடவடிக் கையும் எடுக்காத நிலையில் அம்பேத்கரிய மாணவர் மன்றம் 17.4.2023 அன்று நிர்வாகத் தின் போக்கிற்கு எதிராக போராட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக நடத்தி முடித்தது. 

இதனைத் தொடர்ந்தே, கல்லூரி நிர்வாகம் படங்களை அவமதித்தவர்களின்மீது நடவடிக்கை எடுக்க ஒரு ஒழுங்கு குழுவினை அமைத்தது.

அம்பேத்கரிய மாணவர் மன்றம் - அம் பேத்கர் பல்கலைக்கழகம் டில்லி கீழ்க்கண்ட கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத் திடம் சமர்ப்பித்தனர்.

1. கண்காணிப்பு ஒளிப்பட பதிவுக் கரு வியை சோதித்து, இந்த அவமதிப்பு செயலில் ஈடுபட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

2. பல்கலைக் கழகத்தின் அத்தனை வளாகங்களிலும் தாழ்த்தப்பட்ட சமூக மற்றும் பழங்குடியினர் நலக்குழு அமைத்திட வேண்டும்.

3. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப் பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

டில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் அம்பேத்கரிய மாணவர் மன்றத்துடன்  தோளோடு தோள் நிற்போம் என்று நாடு தழுவிய அளவில் பல்வேறு மாணவர் அமைப்புகளின் ஆதரவு பெருகி வருகிறது.

No comments:

Post a Comment