கற்பூரம் ஏற்றியபோது தீ விபத்து;
11 வாகனங்கள் எரிந்து நாசம்
பெங்களூரு, ஏப்.7 தர்ம ராயசுவாமி கோவில் கரக திருவிழாவின்போது ராட்சத கற்பூரம் ஏற்றிய போது ஏற்பட்ட தீ விபத்தில் 11 வாகனங்கள் எரிந்து நாசமாகின.
பெங்களூரு திகளர பேட்டையில் உள்ள தர்மராய சுவாமி கோவி லில் நடைபெறும் கரக திருவிழா நடை பெற்று வருகிறது. கரக திரு விழாவையொட்டி திரவுபதி தேவிக்கு கற்பூர தீபம் ஏற்றப்படுவது வழக் கமாம். என்.ஆர்.சர்க் கிளில் இருந்து 700 மீட்டர் தூரம் 3 அடி உயர ராட்சத கற்பூர தீபம் ஏற்றப்படும். அதா வது தர்மராயசுவாமி கோவில் முன்பாக 2 இடங்களில் தலா 50 கிலோ எடையுடன் 3 அடி உயர ராட்சத கற்பூர தீபம் ஏற்றப்படும். அதன்படி, கற்பூர தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
அந்த சந்தர்ப்பத்தில் சாலை யோரம் நிறுத் தப்பட்டு இருந்த மோட் டார் சைக்கிள்கள், ஆட் டோவில் திடீரென்று தீப்பிடித்தது.
கற்பூர தீபத்தில் இருந்து வாகனங்களுக்கு தீ பரவியது. இதை பார்த்து அங்கிருந்த பக் தர்கள் அதிர்ச்சி அடைந் தனர். உடனடியாக வாகனங்களில் பிடித்த தீயை அணைக்க தண் ணீரை பிடித்து ஊற்றி னார்கள். தீயணைப்பு படை வீரர்களும் வரவ ழைக்கப்பட்டனர். அதற்குள் பக்தர்களே வாகனங்களில் பிடித்த தீயை அணைத்தார்கள். ஆனாலும் 10 மோட்டார் சைக்கிள் களும், ஒரு ஆட்டோவும், தீயில் எரிந்து நாசமாகின. கற்பூரம் ஏற்றப் பட்ட இடத்திற்கு சிறிது தூரம் வாக னங்களை நிறுத்தி இருந்த போதிலும் வெப்பம் காரணமாக பெட்ரோல் டாங்குகள் உள்ள பெட்ரோல் ஆவி யாகி தீப்பிடித்தது தெரியவந்துள்ளது. பக்தர்கள் அலட்சியமாக வாகனங்களை நிறுத் தியதால், தீப்பிடித்த தாகவும் இதற்கு கோவில் நிர்வாகம் பொறுப்பு இல்லை என்றும் நிர் வாகிகள் தெரிவித்துள் ளனர்.
இந்த நிகழ்வால் தர்மராயசுவாமி கோவி லில் நேற்று (6.4.2023) பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment