தமிழ்நாட்டுக்கு புதிய ரயில் திட்டங்களை முடிக்க நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து அநீதி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 10, 2023

தமிழ்நாட்டுக்கு புதிய ரயில் திட்டங்களை முடிக்க நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து அநீதி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு

மதுரை, ஏப்.10- தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட வில்லை என்றும்  கடந்த 16 ஆண்டுகளாக முடியாத  ரயில் திட்டங்களை முடிக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து அநீதி இழைக் கப்படுகிறது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மதுரை  மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங் களை துவக்கிவைக்கும் விழாவில் பங்கெடுத்து உரையாற்றிய பிரதமர் தமிழ்நாட்டில் ரயில் வளர்ச்சி திட்டங்களுக்குத் தங்கள் ஆட்சியில் அதிக நிதி ஒதுக்கியுள்ளதாக கூறினார். 

இந்தாண்டு 6000 கோடி ஒதுக்கி உள்ளதாகவும் 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிக  தொகை ஒதுக்கப்பட்டு வருவதாக  கூறினார். பிரதமரின் இந்த கூற்றுக்கும், ஒன்றிய அரசு வெளியிட் டுள்ள நிதிநிலை அறிக்கையின் பிங்க் புத்தகத்திற்கும் இடையில் நிறைய வேறுபாடு உண்டு.  

பிரதமர் துவக்கி வைத்த இரா மேஸ்வரம்- தனுஷ் கோடி திட்டத்திற்கு ரூ.385 கோடியும், திண்டிவனம் -நகரி திட்டத்திற்கு ரூ.200 கோடியும், தவிர மற்ற திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.50 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது. 2006 இல் இருந்து  16 ஆண்டுகளில் இவர்கள் ஆட்சிக்கு வந்த ஒன்பது ஆண்டுகளிலும் இதுவரை செலவு செய்யப்பட்ட தொகை  ரூ.11,400 கோடிக்கு வெறும் ரூ.211 கோடி தான். இந்த ஆண்டு ஆயிரம்  கோடி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் இது யானை பசிக்கு சோளப்பொரிதான். 

இதே போல இரட்டைப்பாதை திட்டங்களுக்கு ரூ.5340 கோடி தேவைப் படுகிறது. காட்பாடி - விழுப்புரம்; சேலம் - கரூர் - திண்டுக்கல்; ஈரோடு - கரூர் ஆகிய இரட்டை பாதை  திட்டங்களுக்கு தேவைப்படுகிற நிதி  மட்டும் ரூ.3851 கோடி. சென்ற ஆண்டு  ஒதுக்கியது ஒவ்வொரு திட்டத்துக்கும் வெறும் ஆயிரம் கோடி .இந்த  ஆண்டு 3 திட்டத்துக்கும் சேர்த்து  வெறும் ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

அகலப்பாதை திட்டத்தின் தொடர்ச்சியாக சின்னசேலம்- கள்ளக் குறிச்சி; காரைக்கால் -பேரளம்; தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ஆகிய  திட் டங்கள் போதிய நிதியின்றி தவிக் கின்றன. மதுரை -மணியாச்சி- தூத்துக் குடி இரட்டை பாதை திட்டம் ஓரள வுக்கு முடியும் நிலையில் இருந்தாலும் வாஞ்சி மணியாச்சி- நாகர்கோவில் திட்டமும் அதே போல கன்னியாகுமரி- நாகர்கோவில்- திருவனந்தபுரம் திட்ட மும் சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு அதாவது 2021-_2022இல் முடியும் என் றார்கள். இன்னமும் அது இழுத்துக் கொண்டு தான் உள்ளது.

2023_-2024 தெற்கு ரயில்வேக்கே ரூ.8,322 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 6000 கோடி தமிழ்நாட்டுக்கு -  இந்த ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. ஆனால் 2014-_2015 இல் இருந்து 2022- _ 2023 வரை சராசரியாக ஆண்டுதோறும் 2900 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள் ளது. முந்தைய ஆட்சி காலத்தின்  அதே சராசரி தான் பாஜக ஆட்சிக்  காலத் திலும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 16 ஆண்டு களாக முடியாத புதிய ரயில் திட்  டங்களை முடிக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. வடக்கு ரயில்வேயுடன் ஒப்பிடும் போது தெற்கு ரயில்வேயின் பல  திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக் கப்படுவதை மறைக்க முடியாது. இனியும் பாரபட்சம் கலைந்து தெற்கு  ரயில்வேக்கு தொடர்ந்து போதுமான  நிதியை ஒதுக்கீடு செய்யுங்கள் என்று  கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment