வரவேற்கிறோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 18, 2023

வரவேற்கிறோம்!

- ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தனது வாழ்நாளையே ஒப்படைத்த மாமனிதர் இளையபெருமாள் அவர்கள் பெயரில் அரசு சார்பில் நினைவு மண்டபம் சிதம் பரத்தில் அமைக்கப்படும் என்று இன்று (18.4.2023) சட்டப்பேரவையில் முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கதேயாகும்!

அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்து, அவரால் அளிக்கப்பட்ட அறிக்கையில், தீண்டாமை ஒழிப்புக்கு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை அவசியமானது என்ற பரிந்துரையை அழுத்தமாகக் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தந்தை பெரியாரிடத்திலும், நம்மிடத்திலும், நம் இயக்கத்தின்பாலும் சாலப் பரிவும், மதிப்பும் கொண் டவர். பொதுவாழ்வின் மாமணியாக ஜொலித்த நல்லார்க்கு நல்லதோர் நினைவுச் சின்னத்தை- எதையும் செய்யவேண்டிய ஒன்றைத் தவறாது காலத்தாற் கடமை உணர்வுடன் ஆற்றக்கூடிய மாண்பமை ஆட்சியாளர் நமது முதலமைச்சர் என்பதற்கு மேலும் இது ஓர் எடுத்துக்காட்டே!

- கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment