நீதி, சிறைத் துறை செயல்பாட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் மும்பை அறக்கட்டளை ஆய்வில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 7, 2023

நீதி, சிறைத் துறை செயல்பாட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் மும்பை அறக்கட்டளை ஆய்வில் தகவல்

 சென்னை,ஏப்.7- நீதி - சிறைத்துறை செயல்பாட்டில் நாடு தழுவிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித் துள்ளதாக மும்பை தனியார் அறக்கட்டளை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல் படும் தனியார் அறக்கட்டளை சார்பில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நாட்டில் காவல், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்கலில் சிறந்த மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு 'இந்திய நீதி அறிக்கை' வெளியிடப் படுகிறது. அதன்படி, கடந்த 2022ஆம் ஆண்டுக்கான அறிக்கை டில்லியில் அண்மையில் வெளியிடப்பட்டது. 

இதுகுறித்து தமிழ்நாடு சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தனியார் அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையின்படி, ஒட்டுமொத்தமாக நாட்டிலேயே முதல் இடத்தை கருநாடகம் பிடித்துள்ளது. 2-ஆவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தெலங்கானா, குஜராத், ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா, பஞ்சாப், அரியானா, உத்தராகண்ட், ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங் களைப் பிடித்துள்ளன.

சிறிய மாநிலங்களை பொறுத்தவரை நாட்டிலேயே முதல் மாநிலமாக சிக்கிம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தனித்தனியாக காவல், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்கலில், சிறை மற்றும் நீதித்துறையில் நாட்டிலேயே சிறந்தமாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டு உள் ளது. நீதித்துறையை பொறுத்தவரை கடந்த 3 ஆண்டு களாக தமிழ்நாடுதான் முதலிடம் பெற்றிருக்கிறது.  இவ்வாறு சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment