உங்களை மறக்கவில்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 27, 2023

உங்களை மறக்கவில்லை!

"நம்முடைய தோழர்கள் எல்லாம் நகர மன்றத்திலே நுழைகிற நேரத்தில், உச்சியிலிருந்து பாதம் வரையில் தொங்கக் கூடிய நல்லதோர் மலர் மாலையைத் தயாரித்து, நகர சபைக் கட்டடத்திற்கு எதிரிலேயே கவனிப்பாரற்று நிற்கின்ற - தமிழர்களைக் கை தூக்கிவிட்ட சர் தியாகராயர் சிலைக்கு அணிவித்து, அவரது பொன்னடிகளைத் தொழ வேண்டும். "மகானே! நீங்கள்தான் தமிழர் சமுதாயத் திற்கு முதன் முதல் அறிவூட்டினீர்கள்; வாழும் மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்தீர்கள்; உங்களது வழிவந்த நாங்கள், நீங்கள் பட்ட தொல்லைகளைவிட அதிகமாக அவதிப் பட்டோம். நீங்களாவது செல்வச்சீமான்; நாங்கள் பஞ்சைப் பராரிகள்! ஆனால் சீமான்கள் உங்களை மதிக்க மறந்தார்கள்; ஏழைகளாகிய நாங்கள் உங்களை மறக்கவில்லை!" - என்று வீர வணக்கம் செலுத்தி விட்டு உள்ளே நுழைந்து கடமையாற்ற வேண்டுகிறேன்"

அறிஞர் அண்ணா அவர்கள் 1959ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.கழகம் பெரு வெற்றி பெற்றபோது  கூறியது....


No comments:

Post a Comment