கோவில் விழாவில் பட்டாசு விபத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 5, 2023

கோவில் விழாவில் பட்டாசு விபத்து

 திருவள்ளூர்,ஏப்.5- திருவள்ளூரை அடுத்த போளி வாக்கம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கியது.  இதனைத் தொடர்ந்து 2.4.2023 அன்று இரவு மாரியம்மனுக்கு அலங்காரம் செய்து அடிதாண்டம் போடுதல் நிகழ்ச்சியும், பம்பை உடுக்கையுடன் வீதி உலாவும் நடை பெற்றது. வீதி உலாவின் போது வானவேடிக்கை நடத்துவதற்காக மப்பேடு அடுத்த பேரம்பாக்கத்தில் இருந்து ஏராளமான பட்டாசுகள் கொண்டு வரப் பட்டிருந்தன.

பட்டாசு வெடித்தபோது அதில் இருந்த பறந்த தீப்பொறி அருகில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு குவியல் கள் மீது பட்டது.  உடனே  அனைத்து பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன்  வெடித்து சிதறின. இதில்  பட்டாசு தயாரிப்பு உரிமையாளர் சாதிக் அலி, ஊழியர் சஞ்சீவி ஆகியோர் உடல் கருகினர். சாதிக் அலியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு  மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில்  சேர்த்தனர்.

No comments:

Post a Comment