புல்வாமா தாக்குதல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 25, 2023

புல்வாமா தாக்குதல்!

தேர்தல் வெற்றிக்கு பி.ஜே.பி. பயன்படுத்தியது 

திரிபுரா மாநில மேனாள் முதலமைச்சர் 

மாணிக் சர்க்கார் குற்றச்சாட்டு

அகர்தலா, ஏப். 25- ஜம்மு -காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு பாது காப்பு படையினர் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவா திகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40 பேர் வீரமரணமடைந் தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத் தியது.

இதனிடையே, புல்வாமா தாக்குதல் நடைபெற்றபோது ஜம்மு -காஷ்மீர் ஆளுந ராக இருந்த சத்யபால் மாலிக் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், உள வுத்துறை மற்றும் பாது காப்புத் துறையின் தோல் வியே புல்வாமா தாக்குத லுக்கு காரணம் என்று கூறினார்.

சத்யபால் மாலிக்கின் பேச்சு தற்போது அரசி யல் வட்டாரத்தில் பர பரப்பை ஏற்படுத்தியுள் ளது. இந்நிலையில், புல் வாமா தாக்குதல், பால கோட் வான் தாக்குதலை தேர்தலில் வெற்றிபெற பா.ஜ.க. பயன்படுத்திக் கொண்டது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி யின் மூத்த தலைவ ரும் திரிபுரா மேனாள் முதல மைச்சருமான மாணிக் சர்க்கார் கூறினார்.

இது தொடர்பாக மாணிக் சர்க்கார் கூறுகை யில், புல்வாமா தாக்குதல், பாலகோட் வான் தாக்கு தல் சூழ்நிலையை பயன்ப டுத்தி 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற் றிபெற்றது.

இந்த சம்பவம் நடை பெற்ற போது ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் தற்போது இந்த விவகா ரம் குறித்து பேசியுள்ளார்' என்றார். மேனாள் ஆளு நர் சத்யபால் மாலிக் இது குறித்து பேட்டி அளித்த பின் அவருக்கு சிபிஅய் அழைப்பாணை அனுப் பும் என எதிர் பார்த்தேன்.

அது சரியாக நடந்தது. காப்பீடு முறைகேடு தொடர்பான விசார ணைக்கு ஆஜராகும்படி ஒன்றிய விசாரணை அமைப்பு சத்யபால் மாலிக்கிற்கு தாக்கீது அனுப்பியுள்ளது' என் றார்.

No comments:

Post a Comment