வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கொடுக்கப்பட்ட வீடுகள் 53 கோடி ரூபாய் வட்டி குறைப்பு அமைச்சர் முத்துசாமி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 25, 2023

வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கொடுக்கப்பட்ட வீடுகள் 53 கோடி ரூபாய் வட்டி குறைப்பு அமைச்சர் முத்துசாமி தகவல்

கோவை,ஏப்.25- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு அளிக் கப்பட்டுள்ள நிலையில், ரூ.53 கோடி வட்டி குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

கோவை கணபதி பகுதியில் உள்ள வீட்டு வசதி துறையின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வணிக வளாகத்தை வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.

"கணபதி பகுதியில் முதலமைச்சர் உத்தர வின்படி அனைத்து இடங்களிலும் வீட்டு வசதி துறையால் கட்டப் பட்டு வரும் கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகி றதா?  பொதுமக்களுக்கு எப்படி விருப்பம் இருக் கிறது? என ஆய்வு செய்ய வேண்டும் என சொல்லியிருக்கிறார்.

அதன் அடிப்படை யில், இன்று கோவையில் உள்ள பல்வேறு இடங்களில் ஆய்வு செய்துள்ளோம்.  கணபதி பகுதியில் 36 சென்ட் நிலம், இதில் 5 தளங்கள் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 27 ஆயிரத்து 600 சதுர மீட்டர் சதுர அடி மொத்தமாக கட்டப்பட் டுள்ளது.

இதில் ஒரு வணிக வளாகம் இன்றைக்கு வாடகை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறது. ஹவுசிங் போர்டு என் னென்ன விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என கேட்டு உள்ளார்கள்.

பத்து நாட்களில் அனுமதி கொடுத்தவு டன் வாடகைக்கு கொடுக்கப்படும்.

இந்த கட்டடத்தை பொறுத்தவரை தரமான கட்டடம் கட்டப்பட் டுள்ளது. நல்ல வாட கைக்கு போகும் என நம்பிக்கை உள்ளது.

மூன்று இடங்களை நாங்கள் பார்க்க உள் ளோம். வீடுகளும் தயார் நிலையில் உள்ளது. சிங் காநல்லூர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட 960 வீடுகள் மிகவும் மோசமாக இருந் தது. அது இடிந்த நிலை யில் இருந்தது. 75 சதவீதம் பேர் காலி செய்துள் ளார்கள்.

அதன் பிறகு எங்களி டம் வந்து சொன் னார்கள். வீட்டு வசதி வாரியம் விட்டுக் கொடுப் பதற்காக ஒரு சூழ்நிலை வீட்டு வசதி வாரியம் அவர்களை ஒருங்கி ணைந்து கட்டப்பட்டு அங்கு உள்ள 960 வீடுகள் 4 அசோசியேஷன் ஒன்று இணைந்து சிங்கிள் அசோசியேஷனாக கமிட்டி மூலமாக அவர் களே ஒரு பில்டர் தேர்ந்தெடுத்து, பணிகள் துவங்க உள்ளது.

அதற்கு ஒரு சில சட்ட திருத்தங்களும் தேவைப்பட்டது. சவுரிபாளையம் பகுதியில் நாங்கள் ஆய்வு செய்தோம். சாலைகள் அகலப்படுத்த வேண்டியுள்ளது.

அதனை ஒழுங் குப்படுத்தி கூடுத லாக ஏதாவது செய்ய முடி யுமா எனவும் ஆய்வு செய்து வருகிறோம். சென்னை போன்ற மற்ற இடங்களில் 12 இடங்களில் இது போன்று கேட்டுள்ளார்கள். 

மோசமாக உள்ள கட்டடங்கள் கணக்

கெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், எவ்வளவு கட்டடங்கள் கட்டப் படுகிறது? என எண் ணிக்கை என்பது தேவை இல்லை. அந்தக் கட்ட டம் தரமாக உள்ளதா? என கேட்டுள்ளார்.

ஜாயிண்ட்மெண்ட் வென்ச்சர் என்கின்ற முறையில் நாங்கள் கட் டடம் தரமாக வந்தே ஆக வேண்டும் என ஆய்வு செய்து வருகி றோம்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 3000 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. பல்வேறு முயற் சிகள் செய்து ஆயிரம் வீடுகள் விற்பனை ஆகி உள்ளன. காவல்துறை மொத்தமாக எடுத்து வருகிறார்கள். இதனால், பெரும்வாரியான வீடுகள் விற்கப்படும். எந்த பகுதியில் வீடுகள் தேவை? என கண்டறிந்து பொதுமக்கள் வாங்குகி றார்கள். அடிப்படை வசதிகள் அறிந்து வீட்டு வசதி வாரியமும் கட்டி வருகிறார்கள்.

சட்டசபையில் 41 சங் கங்கள் எங்களை வந்து கேட்டுள்ளார்கள். அவர்கள் 44 கோரிக் கையிலும் வைத்துள் ளார்கள். 18 கோரிக் கைகள் செய்ய முடியாது என மறுப்பு செய்துள் ளோம். வீட்டு வசதி வாரியத்தில் கொடுக்கப் படும் வீடுகள் பத்திரங்கள் இல்லாமல் உள்ளது? என்ற கேள்விக்கு, வீட்டு வசதி வாரியத்தில் பல வீடுகள் பத்திரம் கொடுக் கவில்லை, வாங்கியவர் கள் கேட்கவில்லை.

அந்த வீடுகள் தரமா னதாக இல்லாமல் இருந் ததால் கட்டவில்லை. சில பேர் அந்த வீட்டை விட்டு விட்டார்கள்.  அதுபோன்ற பிரச்சி னைகள் உள்ளது.

முதலமைச்சருக்கு இது போன்ற பிரச்சினை மனுவாக வந்தது. அதற் காக பதினோராயிரம் பத்திரங்கள் கொடுக் கப்பட்டுள்ளது. 

வட்டியை 53 கோடி ரூபாய் குறைத்துள் ளோம். அதனை பயன்படுத்தியவர்கள் 10 கோடியே 75 லட்சம் பேர் பயன் படுத்தியுள் ளார்கள்.

 வரும் மூன்றாம் தேதி வரை முடியவுள்ள நிலை யில், அதனை விரிவாக்கம் பண்ண போகிறோம். தரமான கட்டடம் பற்றிய கேள் விக்கு, ஜாயின்ட் வென்ச் சர் ஆய்வு இடைஇடையே நடத் தப்பட்டு, அதன் உறுதி தன்மையை ஆய்வு செய்ய உள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment