19,654 கைபேசிகள் முடக்கம் சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 23, 2023

19,654 கைபேசிகள் முடக்கம் சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை

சென்னை, ஏப்.23 தேசிய சைபர் கிரைம் அறிக்கையிடல்  (NCRP) போர்ட்டலில், மோசடிக்காக பயன்படுத் தப்படும் அலைபேசி எண்/சிம் பயன்பாட்டை தடுக்க, மாநில நோடல் அதிகாரி காவல் கண்காணிப்பாளர்-மிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய 19,654 அலைபேசி போன் எண்களை தமிழ்நாடு காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு முடக்கியுள்ளது. 

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் (MHA)  தொடங்கப்பட்ட போர்ட்டலைப் பயன்படுத்தி இந்த எண்கள் தடுக்கப் பட்டன.தற்போது, ​​பெரும்பாலும் KYC  புதுப்பிப்புக்கான கோரிக்கைகள், ஆதார் மற்றும் பான் இணைப்பு, அலைபேசி எண்கள் ஆகியவை மூலம் குற்றம் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் (ஏடிஜிபி), சைபர் கிரைம் பிரிவு, சஞ்சய் குமார் கூறுகையில், “மோசடி அழைப்பு களுக்குப் பயன்படுத்தப்படும் எந்த தொலைபேசி எண்ணும் நிரந்தரமாகத் தடுக்கப்படும்.இப்போது, ​​உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மய்யம் (14 சி) சைபர் குற்றத்தில் ஈடுபட்டுள்ள சிம்மைத் தடுப்பதற்கான கோரிக்கையை எழுப்புவதற்காக மத்திய ஆன்லைன் போர்ட்டல் ஒன்றைத் தொடங்கியுள்ளது.

எங்களிடம் புகார்களை அளித்த பாதிக்கப்பட்ட வர்களை தொடர்புகொள்ள, மோசடி செய்பவர்கள் குறிப்பாகப் பயன்படுத்திய எண்களை போர்ட்டலுக்கு அனுப்புகிறோம். பின்னர் அவர்கள் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்குச் (TRAI)   செல்வார்கள். பின்னர் அவர்கள் தடுக்கப்படுவார்கள்”, என்றார்.மாநில நோடல் அதிகாரி காவல் கண்காணிப் பாளர்- சைபர் குற்றத்தில் ஈடுபட்டுள்ள அலைபேசி எண்களை உறுதி செய்த பிறகு, தேசிய சைபர் கிரைம் அறிக்கையிடல் போர்ட்டலில்  (NCRP) அலைபேசி எண்/சிம் தடுப்புக்கான கோரிக்கையை எழுப்ப அதி காரிக்கு அனுமதி வழங்கப்படும்" என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment