அய்தராபாத்தில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை இன்று திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 14, 2023

அய்தராபாத்தில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை இன்று திறப்பு

அய்தராபாத் ஏப். 14 அய்தராபாத்தில் கட்டப்பட்டு உள்ள 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இன்று (14.4.2023) திறந்து வைக்கிறார்.   இந்திய அரசியல் சாசன சிற்பி என போற்றப்படும் அம்பேத்கருக்கு அய்தராபாத்தில் பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அம்பேத்கருக்கு அமைக்கப் பட்டு உள்ள மிகவும் உயரமான இந்த சிலை 125 அடி உயரத்தில் நிறுவப்பட்டு இருக்கிறது.

ரூ.146.5 கோடி செலவில் இந்த பிரமாண்ட சிலை மற்றும் புதிய தலைமை செயலக வளாகத்தை தெலங்கானா அரசு கட்டியுள் ளது. 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளன.

இதைத்தொடர்ந்து அம்பேத்கரின் பிறந்த தினமான இன்று  இந்த பிரமாண்ட சிலை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை தெலங்கானா முதலமைச்சரும், பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சித்தலைவருமான சந்திரசேகர் ராவ் திறந்து வைக்கிறார்.


No comments:

Post a Comment