பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி குமரியில் தொடங்கி டில்லி வரை விவசாயிகள் பயணம் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 2, 2023

பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி குமரியில் தொடங்கி டில்லி வரை விவசாயிகள் பயணம் தொடக்கம்

நாகர்கோவில், மார்ச் 2- கன்னியாகுமரியில் விவசாயிகளின்  நாடாளுமன்றம் நோக்கிய பயணத்தை  ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் பஞ்சாப், அரியானா, மத்திய பிரதேசம், ஒடிசா, இமாச்சல் பிரதேசம், டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முன்னணி விவசாயிகள் சங்கங்களின் தலைவர்களும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பிரதி களும்  குமரி முதல் டில்லி நாடாளுமன்றம் நோக்கிய பயணம் மேற்கொள்கின்றனர். 

டில்லி விவசாயிகள் போராட்டத்தில் பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி நீதி கேட்டு நடைபெறும் இந்த நெடும் பயணத்தை இன்று 2ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து  தொடங்கி உள்ளனர். இதில் பங்கேற்கும் பயணக்குழு உறுப்பினர்கள் நேற்று அதிகாலை மன்னார்குடியில் ஒன்று கூடினர். 

 அங்கு  நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு  பிறகு அவர்கள் அனைவரும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு சென்றனர். இந்த பயணம் குறித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர் களிடம் கூறுகையில், "டில்லியில் விவசாயிகள் போராட் டத்தின்போது  வேளாண் விரோத சட்டத்தை திரும்ப பெறுகிறோம். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதற்கு சட்டம் கொண்டு வருவோம்  என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவாதங் களை கொடுத்தார்.  ஆனால் இதுவரையிலும் கோரிக் கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சி காலத்தில் இறுதி கட்ட நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பிரதமரின் உத்தரவாதம் குறித்து எதுவும் இடம்பெறாதது விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அச்சத்தையும் அளித்தது. அதனால் நீதிகேட்டு இன்று 2ஆம் தேதி கன்னியாகுமரியில் பயணம் தொடங்கி உள்ளது. 


No comments:

Post a Comment