சென்னை, மார்ச் 27- உண்மை செய்தியை விட பொய் செய்தி வேகமாக பரவுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை பெருநகர காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை குறித்த ஆவண திரைப்பட போட்டி யில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட் டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.
இதன் பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்றைய காலத்தில் உண்மை செய்தியை விட பொய் செய்தி வேகமாக பரவுவதா கவும், "வாட்ஸ் ஆப்" மூலம் வரும் தகவல்களில் உண்மை செய்தி எது, பொது செய்தி எது என்பதை பிரித்து அறிந்துகொள்ளும் பகுத்தறிவை மாண வர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
No comments:
Post a Comment