8 கோடி சொத்து சேர்த்தவர் இவர்கள்தான் ஊழல் ஒழிப்பு வீரர்களாம்! ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினரின் மகன் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 3, 2023

8 கோடி சொத்து சேர்த்தவர் இவர்கள்தான் ஊழல் ஒழிப்பு வீரர்களாம்! ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினரின் மகன் கைது

பெங்களூரு, மார்ச் 3 பெங்களூ ருவில் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினரின்  மகனை லோக் அயுக்தா காவலர்கள் கைது செய்துள்ளனர். தாவணகெரே மாவட்டம் சென்ன கிரி தொகுதி பா.ஜனதா சட்ட மன்ற உறுப்பினர் மாடால் விரு பாக்ஷப்பா. இவரது மகன் பிர சாந்த். இவர், பெங்களூருவில் பொதுப்பணித் துறையில் முக்கிய அதிகாரியாக உள்ளார்.

கருநாடக அரசுப் பணியாளர் (கே.ஏ.எஸ்.) தேர்வில் வெற்றி பெற்று பிரசாந்த் அரசுப் பணியில் சேர்ந்திருந்தார். மாடால் விருபா க்ஷப்பாவுக்கு பெங்களூரு கிரெ சென்ட் ரோட்டில் அலுவலகம் உள்ளது. மேலும் அவர் மைசூரு சாண்டல் சோப்பு நிறுவனத்தின் வாரிய தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், கருநாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் துறைக்கு ரசாயனப் பொருட்கள் வாங்குவது தொடர் பாக ஒப்பந்த புள்ளி அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த ஒப்பந்தத்தை எடுக்க பல்வேறு ஒப்பந்ததாரர்கள் இடையே போட்டி ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து, ஒரு ஒப்பந்ததா ரருக்கு ஒப்பந்தம் வழங்க அதிகாரி பிரசாந்த் ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த ஒப்பந்ததாரரும் சம்மதித்ததாக கூறப்படுகிறது.  முதற் கட்டமாக ரூ.40 லட்சத்தை கொடுப்பதாக அந்த ஒப்பந்ததாரர், அதிகாரி பிரசாந்திடம் கூறி இருந்தார். இதையடுத்து, கிரெ சென்ட் ரோட்டில் உள்ள தன் னுடைய தந்தைக்கு சொந்தமான சட்டமன்ற உறுப்பினர் அலுவ லகத்தில் வைத்து ரூ.40 லட்சத்தை பெற்றுக் கொள்வதாக பிரசாந்த் கூறியதாக தெரிகிறது. இதற்கு ஒப்பந்ததாரரும் சம்மதம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ரசாயனப் பொருட்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்துக்கு சட்டமன்ற உறுப்பினர் மாடால் விருபாக்ஷப்பா அலுவலகத்தில் வைத்து லஞ்சப்பணம் கைமாற உள்ளதாக லோக் அயுக்தா காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் திடீரென்று சட்டமன்ற. அலுவலகத்தில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் 10-க்கும் மேற் பட்ட காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது 2 பைகளில் ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 முக மதிப்புடைய ரூபாய் பணக் கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் லோக் அயுக்தா காவல் துறையினரிடம்  கையும், களவுமாக அதிகாரி பிரசாந்த் சிக்கி இருந்தார். 2 பைகளிலும் ஒட்டு மொத்தமாக ரூ.40 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரூ.40 லட்சத்தையும் லோக் அயுக்தா காவல்துறையினர் பறிமுதல் செய்தார்கள். அதிகாரி பிரசாந்தையும் கைது செய்தார்கள். மேலும் அந்த அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை லோக் அயுக்தா காவல்துறையினர் பரிசீ லனை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், ஒப்பந்தம் கொடுப்பதற்காக ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதால் அதிகாரி பிரசாந்த் கைது செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பெங்களூரு, தாவண கெரேயில் உள்ள பிரசாந்திற்கு சொந்தமான வீடுகளிலும் லோக் அயுக்தா காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள். அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் சொத்துப் பத்திரங்கள் உள்ளிட்டவற்றையும் பரிசீலனை நடத்திய லோக் அயுக்தா காவல்துறையினர் சில ஆவணங் களை கைப்பற்றி எடுத்து சென்றி ருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு லோக் அயுக்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரையும் லோக் அயுக்தா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லஞ்ச விவகாரம் தொடர்பாக அதிகாரி பிரசாந்த் உள்பட கைதான 5 பேரிடம் லோக் அயுக்தா  காவ லர்கள்  விசாரித்து வருகின்றனர். இதற்கி டையே விருபாக்ஷப்பா சட்டமன்ற உறுப்பினர் அலுவ லகத்தில் கணக்கில் வராத மேலும் ரூ.1.22 கோடி ரூபாய் சிக்கி இருப்பதாகவும், ஒப்பந்ததாரரிடம் அவர் தான் லஞ்சம் வாங்க கூறிய தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 இவ்வாறு முறைகேடாக ரூ.8 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் விருபாக்ஷப்பா தலைமறைவாக உள்ளார். இத னால் அவரைப் பிடித்து விசாரிக் கவும் லோக் அயுக்தா காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment