இயற்கை சீற்றங்களால், தமிழ்நாட்டில் 423 கி.மீ. நீள கடற்கரை பாதிப்பு: மாநிலங்களவையில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 5, 2023

இயற்கை சீற்றங்களால், தமிழ்நாட்டில் 423 கி.மீ. நீள கடற்கரை பாதிப்பு: மாநிலங்களவையில் தகவல்

புதுடில்லி, பிப். 5- தமிழ்நாட்டில் 423 கி.மீ. நீள கடற்பகுதி இயற்கை சீற்றங்களாலும், மனித ஆக்கிரமிப் புகளாலும் தன் வடிவத்தை இழந் துள்ளதாக, மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள் விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் அளித்துள்ளார். 

இயற்கை பேரிடர் களால் நாட்டின் கடற்கரை பகுதிகள் அழிந்துவருவது குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப் பினர் கனிமொழி என்விஎன் சோமு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்து ஒன்றிய புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது:

சென்னையில் உள்ள தேசிய கடற்பகுதி ஆராய்ச்சி மய்யம் ஒன்றிய புவி அறிவியல் அமைச்ச கத்தின் ஓர் அங்கமாகும். செயற் கைக் கோள் மற்றும் கள ஆய்வுகள் மூலம் கடற்கரை பகுதிகளை இந்த மய்யம் கண்காணித்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் 6,907 கி.மீ. நீளமுள்ள ஒட்டுமொத்த கடற் கரை பகுதியிலும் கடந்த 1990 முதல் 2018 வரையிலான 28 ஆண்டு களில் தொடர் ஆய்வு மேற் கொண்டு வரைபடங்களை தயா ரித்துள்ளது. ’அதன்படி பார்த்தால், கடல் அரிப்புக்கும், மனிதர்களால் ஏற்படும் அழிவுக்கும் இலக்காகி 34 சதவீத கடற்கரை பகுதி தனது முந்தைய வடிவத்தை இழந்துள் ளது. 27 சதவீத இயற்கையான மாற்றங்களால் தனது வடிவத்தை இழந்திருக்கிறது. இவ்வாறு 61 சதவீத கடற்கரை பகுதி பாதிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் 6,907 கி.மீ. நீளம் உள்ள கடற்கரை பகுதியில் 39 சதவீதம், அதாவது 2,700 கி.மீ. நீள கடற்பகுதி மட்டுமே வடிவம் மாறாமல், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாமல் உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 991 கி.மீ. நீளமுள்ள கடற்கரை பகுதியில் 423 கி.மீ. நீள கடற்பகுதி இயற்கை சீற்றங்களுக்கு இலக்கா கிறது.  அதன் வடிவமும் மாறுகிறது. ஆண்டுதோறும் பெறப்படும் ஆய் வறிக்கை, வரைபடங்கள் ஆகியவை பல்வேறு துறைகளுக்கு அனுப்பப் பட்டு, அழிவில் இருந்து கடற்கரை பகுதிகளை பாதுகாக்க நடவ டிக்கை எடுக்கப்படுகிறது. சோதனை முயற்சியாக, புதுச்சேரி யில் 2 இடங்களில் அறிவியல் பூர்வமான சில நடவடிக்கைகளை புவி அறிவியல் அமைச்சகம் மேற் கொண்டுள்ளது. இதன்மூலம் கடற்பகுதியில் இழந்த நிலப்ப ரப்பை மீட்கமுடியும். கேரள மாநிலம் செல்லனம் கடற்கரை கிராமத்தில் கடல் அரிப்புதடுப்பு திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத் தப்பட்டது. அதன் பலனாக, சமீபத்திய பருவமழைக்கு பிறகும் அப்பகுதியில் எவ்வித அழிவோ, மாற்றமோ ஏற்படவில்லை. கடற் கரை பகுதிகளை பாதுகாக்க இது போன்ற தொழில்நுட்ப உதவி களை தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, கோவா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளுக்கு ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment