ஆளுநர் செயல்பாடுகளுக்கு எதிராகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்! சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 8, 2023

ஆளுநர் செயல்பாடுகளுக்கு எதிராகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்! சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

சென்னை, ஜன .8 தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக அனைவரும் இணைந்து இயக்க மாக போராட்டம் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக நடவ டிக்கை எடுக்கும்படி கோரி முதலமைச் சரிடம் மனுக்கள் அளித்தார். அதைத் தொடர்ந்து கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி வருமாறு:-  பொது வுடமை இயக்கங்களின் முன்னோடியான பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து போராடிய மார்க்சிய சிந்தனையாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, அவரது மகள் பேராசிரியர் ஸ்டெபானி ஆகியோருக்கு சென்னை யில் வருகிற 18-ஆம் தேதி வரவேற்பு விழா நடைபெற உள்ளது. 

இதில் முதலமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பிதழ் அளித்தோம். குமரி மாவட்டம் உள் ளிட்ட தென் திருவிதாங்கூர் சமஸ்தானத் தில் நடைபெற்ற தோள்சீலைப் போராட்டத்தின் 200-ஆவது ஆண்டு விழா, நாகர்கோவிலில் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினோம். தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் செயல்படும் திருஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன் வலையில் இருந்து விவசாயிகளை விடுவிக்க தமிழ்நாடு அரசு, வங்கி நிர்வாகங்கள் மற்றும் ஆலை நிர்வாகத்தோடு பேசி தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண் டோம். 

ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் விரோதமாகவும், பழைமைவாத சனாதன கருத்துக்களையும், அரசியல் சாசனத்திற்கும் முரண்பாடாக பேசி வருகிறார். ஆளுநராக இருந்து கொண்டு அரசுக்கு எதிராக செயல்பட்டு வரு கிறார். புதிய கல்விக்கொள்கையை அமலாக்குவது, தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க மறுப்பது போன்ற செயல்களில் ஈடுபடு கிறார். நாடாளுமன்றத்தால் அங்கீகரிக் கப்பட்ட தமிழ்நாடு என்ற பெயரை பயன்படுத்துவது தவறு என பேசி உள்ளது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.

ஆளுநரின் இந்த போக்கு குறித்த தமிழ்நாடு மக்களின் கொந்தளிப்பான எதிர்ப்பு உணர்வுகளை முதலமைச்ச ருக்கு தெரியப்படுத்தினோம். அனைத்து பிரச்சினைகளையும் கேட்டறிந்த முதலமைச்சர், எங்கள் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆளுநருக்கு எதிராக தனித்தனியாக போராட்டம் நடத்து வதற்கு பதிலாக அனைவரும் ஒன்றாக இணைந்து இயக்கமாக போராட்டம் நடத்தலாம் என தி.மு.க. தலைவர் என்ற முறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினி டம் கூறினேன். அதை பரிசீலிப்பதாக அவர் கூறினார்.  

அண்ணாமலை தலைமையில் இயங் கும் தமிழ்நாடு பா.ஜனதா கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஒரு கட்சி சம்பந்தப்பட்டது அல்ல. அது குற்றவியல் வழக்கு தொடர்பானது. அதற்கு பதில் கூறாமல் பத்திரிகையாளர் மீது கோபப்படுவது 3-ஆம் தர அரசியல். இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின் உடனிருந்தார்.


No comments:

Post a Comment