குளச்சல்,ஜன.8- கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் முகமது பயஸ், ராபில், ஷாகித். இவர்கள் மூன்று பேரும் 9ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் பள்ளி முடித்து விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது குளச்சல் அடுத்த உடையார் வினை பகுதியில் உள்ள சாலையில் விலை உயர்ந்த அலைபேசி இருந்ததைப் பார்த் துள்ளனர். பிறகு அதை எடுத்த அவர்கள் அருகே இருந்த காவல்நிலையத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் அங்குக் காவல் ஆய்வாளர் கிறிஸ்டியனிடம் அலை பேசியை ஒப்படைத்து, 'சார் சாலையில் அலைபேசி கிடந்தது. இதை சரியான உரிமையாளரிடம் ஒப்படைத்துவிடுங்க' என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
சிறுவர்களின் இந்த நல்ல குணத்தைப் பார்த்த காவல் ஆய்வாளர் மாணவர்களை கை குலுக்கி பாராட்டி வழி அனுப்பி வைத்தார். கன்னியாகுமரி அருகே சாலை யில் கிடந்த விலை உயர்ந்த அலைபேசியை எடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த பள்ளி சிறுவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
No comments:
Post a Comment