நச்சுப் பேச்சைக் கக்கும் ஆளுநர் (ஆர்.எஸ்.எஸ்.) ரவி ஆதித்தமிழர் பேரவை கடுங் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 9, 2023

நச்சுப் பேச்சைக் கக்கும் ஆளுநர் (ஆர்.எஸ்.எஸ்.) ரவி ஆதித்தமிழர் பேரவை கடுங் கண்டனம்

சென்னை,ஜன.9- ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் நடந்த விழா ஒன்றில் "தமிழ்நாடு" என்ற பெயரை அனைவரும் தமிழகம் என்றே கூற வேண்டும்,என்று பித்தம் தலைக் கேறிய நிலையில் கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி யை ஆதித்தமிழர் பேரவை  வன்மையாக கண்டிக்கிறது.

திராவிடம், தமிழ்நாடு, சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு என்கிற வார்த்தைகளால்  ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக சங்பரிவாரங்கள் எரிச்சலடை வதை போல் நாகாலாந்து மாநிலத்திலிருந்து மோடி அண்ட் கோ-வால் இறக்குமதி செய்யப்பட்டு போகிற இட மெல்லாம் தன் பங்கிற்கு எரிச்சலடைந்து கொள்கிறார் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி.

இவரது எல்லை மீறிய பேச்சுக்கள், பார்ப்பனிய நச்சுக் கருத்துக்கள், எதேச் சதிகார வார்த்தைகள், வரம்பு மீறிய செயல்பாடுகள் என பாசக-வினரையே முந்திவிடுவார் போல,

“தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது, எல்லாவற்றுக் கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு, முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட,தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.''

என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று சொல் வதற்கு ஆர்.என்.ரவிக்கு எந்த அரு கதையும் இல்லை. அதிகார ஆணவம் தலைக்கேறிய நிலையில், என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஆளுநர் எல்லாவற்றையும் திட்டமிட்டு, ஆர்.எஸ்.எஸ். - பார்ப்பனிய - இந்துத்துவ கும்பல் போட்டுத்தந்த தடத்தில் நின்று கொண்டு பித்தம் தலைக்கேறிய நிலையில் ஆர்.என்.ரவி பேசிக்கொண்டு இருக்கிறார்.

தமிழ்நாடு என்று பெயர் சூட்டு வதற்கு நடைபெற்ற போராட்ட வர லாற்றை தெரிந்து கொள்ள ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் ஆர்.என்.ரவி கோவில் குளத்தை சுற்றுவதை விட அரசு ஆவண காப்பகத்தை சற்று சுற்றி வர வேண்டும்.

‘தமிழ்நாடு’என்று தொலைநோக் கோடு அறிஞர் அண்ணா அவர்கள் சூட்டியப் பெயர்

இது வெறும் பெயர் மட்டும் அல்ல, கோடானு கோடி தமிழ் மக்களின் இரத்த நாளங்களில் ஓடும் சுயமரியாதை உணர்வுதான் ‘தமிழ்நாடு’ என்று மலர்ந்தது.

ஆளுநர் ஆர்.என்.ரவி எல்லை மீறிப் பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. திராவிட இயக்கம் பற்றிய அவரது விமர்சனங்கள், அவர் பா.ஜ.க. வின் நிழல் தலைவர் என்பதை வெளிப்படுத்துகிறது

ஆர்.என்.ரவி ‘தமிழ்நாடு’ பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று கூறிய கருத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.

-இவ்வாறு அவர் குறிப்பிட் 

டுள்ளார்.


No comments:

Post a Comment